தேர்தல் முடிவுகளால் வன்முறை அபாயம்... ஆந்திரா முழுவதும் பலத்த பாதுகாப்பு!
Recommended Video
அமராவதி: தேர்தல் முடிவுகள் வெளியாகும்போது வன்முறை அபாயம் இருப்பதையடுத்து, ஆந்திராவில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
ஆந்திராவில் லோக்சபா தேர்தலுடன் சட்டசபைக்கு தேர்தல் நடந்தது. சட்டசபைக்கு 175 தொகுதிகளுக்கும், லோக்சபாவுக்கு 25 தொகுதிகளுக்கும் தேர்தல் நடத்தப்பபட்டது.இந்த நிலையில், சந்திரபாபு நாயுடு தலைமையிலான ஆளும் தெலுங்கு தேசம் கட்சிக்கும், ஜெகன்மோகன் ரெட்டி தலைமையிலான ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சிக்கும் இடையே கடும் போட்டி நிலவுகிறது.

தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் கலவையான கணிப்புகளாக உள்ளன. எனினும், பல கருத்துக் கணிப்புகள் ஜெகன் மோகன் ரெட்டிக்கு ஆதரவாக வந்துள்ளன. அவரது கட்சி 130 இடங்கள் வரை பிடிக்கும் என்று தெரிவிக்கின்றன.
இதனால், அங்கு தெலுங்கு தேசம் மற்றும் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியினரிடையே மோதல் ஏற்படும் சூழல் இருப்பதாக கணிக்கப்பட்டுள்ளது. ஆந்திராவில் 36 இடங்களில் அமைக்கப்பட்டுள்ள 350 வாக்குப்பதிவு மையங்களிலும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
தேர்தல் ஆணையத்தின் சட்டம் ஒழுங்கு பார்வையாளர் கேகே.சர்மா மற்றும் தலைமை தேர்தல் ஆணையர் கோபால கிருஷ்ண திவேதி ஆகியோர் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆய்வு செய்தனர்.
ஆந்திரா முழுவதும் 25,000 பேர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மாநிலம் முழுவதும் முக்கிய இடங்களில் 35 கம்பெனி துணை ராணுவப்படையினரும் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
மேலும், வன்முறை அபாயம் இருப்பதையடுத்து, கூடுதலாக 10 கம்பெனி துணை ராணுவப்படையினரை மத்திய அரசு அனுப்ப உள்ளது. வாக்குப்பதிவை முன்னிட்டு ஆந்திரா முழுவதும் மதுக்கடைகள் மூடுவதற்கு உத்தரவிடப்பட்டள்ளது. வன்முறை ஏற்படும் பகுதிகள் கண்டறியப்பட்டு தீவிர கண்காணிப்பின் கீழ் வைக்கப்பட்டுள்ளது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications