For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மேற்குவங்கத்தில் திரிணாமுல் அலை.. அமோக வெற்றி பெறும்: கருத்து கணிப்பு

By Mathi
Google Oneindia Tamil News

கொல்கத்தா: லோக்சபா தேர்தலில் மேற்கு வங்கத்தின் 42 தொகுதிகளில் பாதிக்கு மேல் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியே கைப்பற்றும் என்கிறது ஏ.பி.பி.-நீல்சன் கருத்து கணிப்பு.

லோக்சபா தேர்தலையொட்டி ஏ.பி.பி நியூஸ் மற்றும் நீல்சன் குழுமம் கருத்துக் கணிப்பை நடத்தி முடிவுகளை வெளியிட்டுள்ளது. 48 தொகுதிகளில் 31 தொகுதியை பாஜக கூட்டணி கைப்பற்றுமாம்.

திரிணாமுல் காங்கிரஸூக்கு 28 இடங்கள்..

திரிணாமுல் காங்கிரஸூக்கு 28 இடங்கள்..

மொத்தம் உள்ள 42 தொகுதிகளில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி மட்டும் 28 தொகுதிகளைக் கைப்பற்றும். அதாவது 41% வாக்குகளைக் கைப்பற்றிவிடுமாம்.

இடதுசாரிகளுக்கு 10 தான்...

இடதுசாரிகளுக்கு 10 தான்...

இடதுசாரிகள் பெரிதும் நம்பியிருக்கும் மேற்கு வங்க மாநிலத்தில் மொத்தம் 10 தொகுதிகள்தான் கிடைக்க வாய்ப்புள்ளது. ஆனால் 31% வாக்குகள் கிடைக்குமாம்.

சி.பி.எம்க்கு 6

சி.பி.எம்க்கு 6

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கோலோச்சிய மேற்கு வங்கத்தில் அக்கட்சிக்கு 6 தொகுதிகளும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 2 தொகுதிகளும்தான் கிடைக்குமாம்.

காங்கிரஸுக்கு 2

காங்கிரஸுக்கு 2

2009 தேர்தலில் இம்மாநிலத்தில் காங்கிரஸ் 6 தொகுதிகளைக் கைப்பற்றியிருந்தது. ஆனால் இம்முறை 2 தொகுதிகள்தான் கிடைக்க வாய்ப்புள்ளதாம்.

பாஜகவுக்கு 1

பாஜகவுக்கு 1

பாரதிய ஜனதா கட்சி மேற்கு வங்கத்தில் ஒரு தொகுதியில் வெல்லக் கூடும் என்கிறது கருத்து கணிப்பு.

English summary
The latest opinion poll conducted by ABP News-Nielsen reveals that Mamata Banerjee's Trinamool Congress (TMC) will get 28 seats out of 42 in the Lok Sabha polls 2014 in West Bengal.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X