தமிழக தலைமை தேர்தல் அதிகாரியாக சத்யபிரதா சாஹு நியமனம்!
டெல்லி : தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி மாற்றப்பட்டு புதிய அதிகாரியாக சத்யபிரதா சாஹு நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
தமிழகத் தேர்தல் அதிகாரியாக ராஜேஷ் லக்கானி கடந்த 2015ம் ஆண்டு நியமிக்கப்பட்டார். 2016-ம் ஆண்டு சட்டசபை தேர்தல் ராஜேஷ் லக்கானி தலைமையில் நடந்தது. இதனைத் தொடர்ந்து அரவக்குறிச்சி, தஞ்சாவூர், திருமங்கலம், ஆர்.கே.நகர் தொகுதிகளின் இடைத்தேர்தல்களையும் நடத்தினார். இதே போன்று குடியரசுத் தலைவர், துணை குடியரசுத் தலைவர் தேர்தலுக்கான வாக்குப்பதிவும் இவரது மேற்பார்வையில் நடந்தது.

தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி பதவியிலிருந்து ராஜேஷ் லக்கானியை மாற்றிவிட்டுப் புதிய அதிகாரி ஒருவரை நியமிக்க ஏற்பாடுகள் நடைபெற்றன. இதன்படி சென்னை பெருநகர குடிநீர் வாரியத்தின் மேலாண் இயக்குனராக உள்ள சத்யபிரதா சாஹு புதிய தமிழக தலைமை தேர்தல் அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
சத்யபிரதா சாஹு தனது பொறுப்பை ஏற்கும் வரை ராஜேஷ் லக்கானி தனது பணியைத் தொடர்வார் என்று தெரிகிறது. ராஜேஷ் லக்கானிக்கு வேறு பொறுப்பு வழங்கப்பட உள்ளது.












Click it and Unblock the Notifications