19 ஆண்டுக்குப் பின் நாளை தமிழக காங். பொதுக்குழு... இந்த தீர்மானங்களை நிறைவேற்றத்தான்!
தமிழக காங்கிரஸ் கட்சியின் பொதுக்குழுக் கூட்டம் சென்னையில் நாளை நடைபெற உள்ளது.
சென்னை: தமிழக காங்கிரஸ் கட்சியின் பொதுக்குழுக் கூட்டம் 19 ஆண்டுகளுக்குப் பின் நாளை சென்னையில் நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் 2 முக்கிய தீர்மானங்களும் நிறைவேற்றப்பட இருக்கின்றன என்கின்றன காங். வட்டாரங்கள்.
அகில இந்திய அளவில் காங்கிரஸ் கட்சியின் உட்கட்சித் தேர்தல் நடைபெற்று முடிவடைந்துள்ளது. தமிழக காங்கிரஸிலும் கடந்த சில மாதங்களாக இப்பணி நடைபெற்று வந்தது.
அகில இந்திய காங்கிரஸ் தலைவராக ராகுல் காந்தி நியமிக்கப்படுவது உறுதியாகி உள்ளது. அகில இந்திய தலைவரை நியமிப்பதற்கு மாநில காங்கிரஸ் கமிட்டிகளின் ஒப்புதல் அவசியம்.

பொதுக்குழு உறுப்பினர்கள்
இதனால் காங்கிரஸ் மேலிடம் ஒவ்வொரு மாநிலத்திலும் மாநில கமிட்டியின் பொதுக்குழுவை கூட்டி அதன் தீர்மானத்தைப் பெற்று வருகிறது. இதற்காக பொதுக்குழு உறுப்பினர்களை நியமிப்பதிலும் காங்கிரஸ் தீவிரம் காட்டியது.

பொதுக்குழு கூட்டம் சென்னையில்
மாவட்டத்துக்கு 15 பொதுக்குழு உறுப்பினர்கள் அவசரகதியில் நியமிக்கப்பட்டிருக்கின்றனர். இந்த நியமனங்களில் ஏகப்பட்ட அக்கப்போர்கள் என்பது தனி விவகாரம்.

தலைமை தாங்குவது?
இப்படி நியமிக்கப்பட்ட உறுப்பினர்களைக் கொண்டு நாளை பொதுக்குழு நடைபெற உள்ளது. சென்னை சத்தியமூர்த்தி பவனில் நடைபெறும் இந்த பொதுக்குழுக் கூட்டத்துக்கு தேர்தல் அதிகாரிகள் சஞ்சய் தத், பாப்பிராஜூ ஆகியோர் தலைமை வகிக்கின்றனர். வழக்கமாக பொதுக்குழுவுக்கு திராவிட கட்சிகளில் தலைவர் அல்லது பொதுச்செயலர் தலைமை வகிப்பர். காங்கிரஸில் தேர்தல் அதிகாரிகளே தலைமை வகிக்கின்றனர்.

ராகுலுக்காக தீர்மானம்
இப்பொதுக்குழுவில் ராகுல் காந்தியை அகில இந்திய தலைவராக நியமிக்க ஒப்புதல் வழங்கப்படும் தீர்மானம் நிறைவேற்றப்படுகிறது. இதையடுத்து மாநில காங்கிரஸ் தலைவரை தேர்ந்தெடுத்து நியமிக்கும் அதிகாரத்தை அகில இந்திய காங்கிரஸ் தலைமைக்கு வழங்கும் தீர்மானமும் நிறைவேற்றப்பட உள்ளது.
-
காங்கிரஸ் வேட்பாளர் பட்டியலில் சாதி பெயர் இருந்தது தட்டச்சு பிழை - சிங்காநல்லூர் ஸ்ரீநிதி விளக்கம்! -
காங்கிரஸ்-க்கு குட்பை.. விலகுவதாக அறிவித்தார் அமெரிக்கை நாராயணன்.. கட்சி மீது கடும் அதிருப்தி -
27 தொகுதிகளுக்கு வேட்பாளர்களை அறிவித்த காங்கிரஸ்.. மேலூர் தொகுதிக்கு மட்டும் நிறுத்திவைப்பு! -
“தனது பெயர்ப் பலகையை காப்பாற்றிக் கொள்ள டெல்லிக்கு ‘காவடி’ தூக்குகிறார் எடப்பாடி” - ஸ்டாலின் தாக்கு! -
சிங்காநல்லூரில் வசமாக சிக்கிய காங்கிரஸ்.. வேட்பாளர் பெயரை பாருங்க! அலப்பறை ஓவரா இருக்கே! -
கொங்கு வேளாளர் கவுண்டரை புறக்கணிச்சிட்டாங்க... காங்கிரஸ் மீது ஜோதிமணி எம்பி குற்றச்சாட்டு -
காங்கிரஸில் இணைந்த 6 நாளில் பென்னாகரத்தில் ஜி.கே.எம்.தமிழ்க் குமரன் போட்டி! தந்தையை எதிர்க்கிறாரா? -
குளச்சல் பிரின்ஸ், மயிலாடுதுறை ராஜ்குமார் உள்பட 5 காங். சிட்டிங் எம்எல்ஏக்களுக்கு வாய்ப்பு மறுப்பு! -
சிங்காநல்லூர் உள்பட 5 தொகுதிகளால் மோதல்.. காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் தாமதம் ஏன்? பரபரப்பு தகவல் -
Melur Candidate: மேலூர் வேட்பாளர் தேர்வில் இழுபறி ஏன்? இவர்தான் காரணமா? 2 நாள்தானே இருக்கு! -
சிங்காநல்லூர் காங்கிரஸ் வேட்பாளர் ஶ்ரீநிதி அண்ணாமலை ஆதரவாளராமே.. போராட்டத்தில் குதித்த கதர்கள் -
மீண்டும் பிரம்மாஸ்திரத்தை கையில் எடுக்கும் மத்திய அரசு.. ரூ.2.5 லட்சம் கோடி மெகா திட்டம்!












Click it and Unblock the Notifications