மத்திய அமைச்சர்கள் அருண்ஜெட்லி, ராஜ்நாத் சிங், ராதாமோகன் சிங் உடன் தமிழக விவசாயிகள் சந்திப்பு
மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி, உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், வேளாண்துறை அமைச்சர் ராதாமோகன்சிங் ஆகியோரை தமிழக விவசாயிகள் சந்தித்து பேசினார்.
டெல்லி: தலைநகர் டெல்லியில் 15 நாட்களாக போராடி வரும் விவசாயிகள் இன்று மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லியையும், உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கையும் சந்தித்து பேசினார். வேளாண்துறை அமைச்சர் ராதாமோகன் சிங்கை தமிழக வேளாண்துறை அமைச்சர் துரைக்கண்ணு தலைமையில் சென்று தமிழக விவசாயிகள் நேரில் சந்தித்து பேசினர்.
டெல்லி ஜந்தர் மந்தர் பகுதியில் தேசிய தென்னக நதிகள் இணைப்பு, விவசாயிகள் கடன் தள்ளுபடி, வறட்சி நிவாரணம் அறிவித்தல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகத்தை சேர்ந்த விவசாயிகளின் அரை நிர்வாணமாக15வது நாளாக போராட்டம் நடத்தி வருகின்றனர்.
தூக்குப் போட்டு போரட்டம், சாலையில் உருண்டு போராட்டம், எலிக்கறி சாப்பிடும் போராட்டம் என பல போராட்டங்களை நடத்தி நூதனமான முறையில் தங்கள் எதிர்ப்பை தெரிவித்தனர். இந்த போராட்டத்துக்கு பல்வேறு தரப்பினரிடம் இருந்தும் ஆதரவு தெரிவிக்கப்பட்டு வருகிறது.

அமைச்சர் துரைக்கண்ணு
தமிழக வேளாண்துறை அமைச்சர் துரைக்கண்ணு எம்.பி தம்பித்துரை ஆகியோர் இன்று டெல்லியில் விவசாயிகளை நேரில் சந்தித்து பேசினர். அப்போது மத்திய அமைச்சரை சந்திக்க அழைத்து செல்வதாக தெரிவித்தனர்.

அருண் ஜெட்லியுடன் சந்திப்பு
மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லியுடன் தமிழக விவசாயிகள் அய்யாக்கண்ணு தலைமையில் நேரில் சந்தித்து பேசினர். திருச்சி சிவா தலைமையில் சென்ற விவசாயிகள், வறட்சி நிவாரண நிதியை தமிழகத்திற்கு கூடுதலாக ஒதுக்க வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தினர். கடன்கள் தள்ளுபடி செய்யப்பட வேண்டும் என்றும் நிதியமைச்சரை வலியுறுத்தினர். அப்போது அமைச்சர் ஸ்மிருதி இராணியும் உடனிருந்தார்.

ராஜ்நாத் சிங் உடன் சந்திப்பு
இதனைத் தொடர்ந்து உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கையும் விவசாயிகள் நேரில் சந்தித்து பேசினர். தங்களின் கோரிக்கைகள் அடங்கிய மனுவையும் அப்போது விவசாயிகள் அளித்தனர். விவசாய கடன்கள் தள்ளுபடி பற்றி மோடி அறிவித்தால் மட்டுமே போராட்டத்தை கைவிடுவோம் என்று விவசாயிகள் தெரிவித்துள்ளனர்

வேளாண்துறை அமைச்சர்
மத்திய வேளாண்துறை அமைச்சர் ராதாமோகன் சிங்கை விவசாயிகள் சந்தித்து பேசினர். அப்போது விவசாயிகளுடன் தமிழக வேளாண்துறை அமைச்சர் துரைக்கண்ணு தலைமையில் சென்ற தமிழக விவசாயிகள் கோரிக்கைகள் அடங்கிய மனுவை அளித்தனர். விவசாய கடன்கள் தள்ளுபடி, வறட்சி நிவாரண நிதி தொடர்பாகவும் அப்போது அவர்கள் பேசியதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஜனாதிபதியுடன் சந்திப்பு
இதனிடையே இன்று இரவு ஜி.கே. வாசன் தலைமையில் தமிழக விவசாயிகள் குடியரசுத்தலைவர் பிரணாப் முகர்ஜி சந்தித்து பேச உள்ளனர். அப்போது காவிரி நதிநீர் பங்கீடு, கடன் தள்ளுபடி பற்றி கோரிக்கை வைக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications