சர்ச்சை எதிரொலி.. டெல்லியில் உள்ள தமிழ்நாடு இல்லங்களின் பெயரில் மீண்டும் மாற்றம்
டெல்லியில் உள்ள தமிழ்நாடு இல்லங்களின் பெயரில் மீண்டும் மாற்றம் செய்யப்பட்டு இருக்கிறது.
டெல்லி: டெல்லியில் உள்ள தமிழ்நாடு இல்லங்களின் பெயரில் மீண்டும் மாற்றம் செய்யப்பட்டு இருக்கிறது. கடும் சர்ச்சை எழுந்த காரணத்தால் பெயர் மாற்றம் செய்யப்பட்டு இருக்கிறது.
டெல்லியில் உள்ள தமிழ்நாடு இல்லங்களின் பெயர் முதலில் வெறும் தமிழ்நாடு இல்லை என்று இருந்தது. ஆனால் இல்ல அதிகாரிகள் கேட்டுக்கொண்டதற்கு இணங்க இதன் பெயர் மாற்றப்பட்டது.
இதில் இருந்த தமிழ்நாடு என்ற பெயர் நீக்கப்பட்டது. அதற்கு பதிலாக தமிழ்நாடு இல்லங்களுக்கு வைகை தமிழ் இல்லம், பொதிகை தமிழ் இல்லம் என பெயர் மாற்றப்பட்டது. இதற்கான அரசாணையும் வெளியிடப்பட்டது.
இதற்கு பல்வேறு அரசியல் கட்சியினர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். தமிழ்நாடு இல்லத்தின் பெயரை மாற்றி அரசு வெளியிட்ட அரசாணையை திரும்பப் பெற வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.
இந்த நிலையில் தற்போது தமிழ்நாடு இல்லங்களின் பெயரில் மீண்டும் மாற்றம் செய்யப்பட்டு இருக்கிறது. வைகை தமிழ்நாடு இல்லம், பொதிகை தமிழ்நாடு இல்லம் என மாற்றம் செய்யப்பட்டு உள்ளது.
டெல்லியில் உள்ள தமிழ்நாடு இல்ல நிர்வாகம் கோரிக்கை வைத்ததால் மீண்டும் பெயர் மாற்றம் செய்யப்பட்டு இருப்பதாக தமிழக அரசு குறிப்பிட்டுள்ளது.