லோக்சபா பக்கமே போகாத தமிழக எம்.பி.க்கள்: சபாநாயகர் சுமித்ரா மகாஜன் கவலை

Subscribe to Oneindia Tamil

டெல்லி: தமிழக, கேரள மாநில எம்.பி.க்கள் மக்களவைக்கு வராமல் இருப்பது சரியில்லை என்று சபாநாயகர் சுமித்ரா மகாஜன் கவலை தெரிவித்துள்ளார்.

பெட்ரோலிய பொருட்களின் விலை தொடர்பாக கர்நாடாகாவை சேர்ந்த பாஜக எம்.பி. நலின் குமார் கட்டீல் மற்றும் கேரளாவை சேர்ந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எம்.பி. பி.கே. ஸ்ரீமதி டீச்சர் ஆகியோர் மக்களவையில் கேள்வி எழுப்பியிருந்தனர்.

TN, Kerala MPs skip parliament session: Sumitra Mahajan calls it bad

இந்நிலையில் திங்கட்கிழமை கேள்வி நேரத்தின்போது அவர்களின் கேள்விகள் எடுத்துக்கொள்ளப்பட்டது. ஆனால் கேள்வி எழுப்பிய இருவரும் அவைக்கு வரவில்லை.

இது குறித்து சுமித்ரா மகாஜன் கூறுகையில்,

எம்.பி.க்கள் அவைக்கு வராமல் இருப்பது மோசமானது என்று தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தின் தற்போதைய தொடர் ஏப்ரல் 25ம் தேதி துவங்கியது. கூட்டத் தொடர் துவங்கியதில் இருந்து தமிழக, கேரள எம்.பி.க்கள் அவைக்கு செல்லவில்லை. தமிழகம், கேரளாவில் வரும் 16ம் தேதி சட்டசபை தேர்தல் நடக்க உள்ளதால் எம்.பி.க்கள் அவைக்கு செல்லவில்லை.

மேலும் சட்டசபை தேர்தல் நடந்த மேற்கு வங்க மாநிலத்தை சேர்ந்த எம்.பி.க்களும் அவைக்கு செல்லவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+