கண்ணீர்புகை குண்டுகளை வீசி தீவிரவாதிகளை மடக்கிய போலீசார்!!

சென்னையில் போலீஸ் பக்ருதீன் என்ற தேடப்பட்ட தீவிரவாதி நேற்று சிக்கினான். அவனிடம் நடத்தபட்ட விசாரணையில் ஆந்திர மாநிலம் புத்தூரில் தேடப்படும் தீவிரவாதிகளான பிலால் மாலிக், மன்னா இஸ்மாயில் ஆகியோர் பதுங்கி இருப்பதாக தெரியவந்து.
இதைத் தொடர்ந்து தமிழக போலீசார் இன்று அதிகாலை பிலால், மன்னா ஆகியோர் பதுங்கியிருந்த் 3 வீடுகளை முற்றுகையிட்டனர். வீட்டு கதவை உடைத்து தீவிரவாதிகளைக் கைது செய்ய முயன்ற சிபிசிஐடி இன்ஸ்பெக்டர் லட்சுமண்ன் கடுமையாகத் தாக்கப்பட்டார்.
அவர் ஆபத்தான நிலையில் சென்னை மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். போலீசார் துப்பாக்கியால் சுடுவதும் தீவிரவாதிகள் பதிலுக்குச் சுடுவதுமாக சுமார் 10 மணி நேரம் போராட்டம் நீடித்தது.
பின்னர் ஒரு கண்ணீர்புகை குண்டை வீட்டுக்குள் போலீசார் வீசினர். அதில் மயக்கமடைந்த பெண் மற்றும் 4 குழந்தைகள் மீட்கப்பட்டனர்.
இதைத் தொடர்ந்து மற்றொரு கண்ணீர்புகை குண்டை வீச அதில் தீவிரவாதிகள் பிலால், மன்னா இஸ்மாயில் இருவரும் மயங்கினர். போலீசார் வீட்டை உடைத்து உள்ளே நுழைந்து மயங்கிய நிலையில் இருந்த இருவரையும் கைது செய்தனர்.
போலீசாருடனான மோதலில் மன்னா இஸ்மாயில் படுகாயமடைந்திருந்தான். அவனுக்கு புத்தூர் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது.












Click it and Unblock the Notifications