அச்சப்படும் இளவரசியை தட்டிக் கொடுத்து ஷாப்பிங் அழைத்துப் போன சசிகலா- பகீர் வீடியோ
பெங்களூரு சிறையில் இருந்து வெளியே போய் ஷாப்பிங் செய்துவிட்டு ஹாயாக சசிகலா திரும்பும் வீடியோ கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
பெங்களூரு: பரப்பன அக்ரஹார சிறையையே விலைபேசிய சசிகலா உச்சகட்டமாக நகர்வலம் போன வீடியோக பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த வீடியோவில் சல்வார் கமீஸ் போட்டு தெனாவெட்டாக சசிகலா கடைத்தெருவுக்கு போய்விட்டு திரும்புகிறார். அவருக்கு பெண் போலீஸ் ஒருவரும் பாதுகாப்பாக வருகிறார்.
எதைப் பற்றியும் கவலைப்படாமல் தில்லு ராணியாக சசிகலா அந்த வீடியோவில் காட்சி தருகிறேன். ஆனால் இளவரசி ரொம்பவே தயங்குவது அப்பட்டமாக தெரிகிறது.
Exclusive video 3..#Sasikala going to shopping from Jail. Is democracy alive??? These criminals should be hanged in front of public. pic.twitter.com/1y5x1ZazcQ
— Hari Prabhakaran (@Hariadmk) July 18, 2017
அதைப்பற்றியெல்லாம் கவலைப்படாத சசிகலா இளவரசியிடம் ஏதோ சொல்லி தட்டிக் கொடுத்து சிறைக்குள் அழைத்து செல்கிறார்.
ஒருவேளை ;இது ஜெயிலு இல்லை இளவரசி.. நம்ம கார்டன்தான்.. எல்லாம் நம்ம கண்ட்ரோல்தான்' என எகத்தாளமாக சொல்லியிருக்கலாம் சசிகலா.