இன்னைக்கு ஒன்னும் அவ்வளவு முக்கியமான நாள் இல்லை.. கூலாக சொல்லும் குமாரசாமி!
இன்றைக்கு ஒன்றும் அவ்வளவு முக்கியமான நாள் இல்லை என குமாரசாமி கூலாக தெரிவித்துள்ளார்.
Recommended Video

பெங்களூரு: இன்றைக்கு ஒன்றும் அவ்வளவு முக்கியமான நாள் இல்லை என குமாரசாமி கூலாக தெரிவித்துள்ளார்.
நொடிக்கு நொடி அதிரடி திருப்பங்கள் ஏற்பட்டு வரும் கர்நாடக அரசியல் களத்தை நாடே உற்றுநோக்கி வருகிறது. அவசர அவசரமாக பாஜக பதவியேற்ற நிலையில், யாருக்கு பெரும்பான்மை உள்ளது என்பதை நிரூபிக்க நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இன்று மாலை 4 மணிக்கு கர்நாக சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறுகிறது. கர்நாடாகாவில் பாஜக ஆட்சி கவிழுமா அல்லது நீடிக்குமா என்பது இன்று மாலை 4 மணிக்கு மேல் தெரிந்து விடும்.

செய்தியாளர் சந்திப்பு
இந்நிலையில் காலை 11 மணிக்கு எம்எல்ஏக்கள் பதவி ஏற்க வேண்டும் என்பதால் ஹைதராபாத்தில் தங்கவைக்கப்பட்ட காங்கிரஸ், மஜத எம்எல்ஏக்கள் இன்று காலை பெங்களூரு திரும்பினர். இதைத்தொடர்ந்து மஜத - காங்கிரஸ் கூட்டணியில் சட்டமன்ற குழு தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ள குமாரசாமி செய்தியாளர்களிடம் பேசினார்.

முக்கியமான நாள் இல்லை
அப்போது இன்றைய நாள் ஒன்றும் எனக்கு முக்கியமான நாள் இல்லை என அவர் தெரிவித்துள்ளார். முக்கியமான நாட்கள் எதிர்காலத்தில் வரும்.

வேட்டையாட முயற்சி
4 மணி வரை பாஜகவினர் எங்கள் எம்எல்ஏக்களை கள்ளத்தனமாக வேட்டையாட முயற்சிப்பார்கள். அனைத்து எம்எல்ஏக்களும் ஒன்றாகதான் உள்ளனர்.

யாரும் சிக்கவில்லை
எந்த எம்எல்ஏவும் எந்த பக்கமும் செல்லவில்லை. எங்கள் எம்எல்ஏக்கள் யாரும் சிக்கவில்லை. நானும் சித்தராமையாவும் ஒன்றாக செல்வோம். இவ்வாறு குமாரசாமி தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications