குஜராத் சட்டசபை தேர்தல்.. விறுவிறு 2ஆம் கட்ட வாக்கு பதிவு.. பகல் 1 மணி வரை 34% வாக்குகள் பதிவு
அகமதாபாத்: குஜராத் சட்டசபைக்கான இரண்டாம் மற்றும் இறுதி கட்ட வாக்குப் பதிவு தொடங்கிய நிலையில் பகல் 1 மணி நிலவரப்படி 34 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
182 சட்டசபைக்கான தேர்தல் டிசம்பர் 1, டிசம்பர் 5 ஆகிய தேதிகளில் இரு கட்டங்களாக நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டது. அதன்படி முதற்கட்ட வாக்குப் பதிவு கடந்த 1ஆம் தேதி நடைபெற்றது. இந்த தேர்தலில் 63.31 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளன.

மொத்தம் 89 தொகுதிகளுக்கு வாக்குப் பதிவு நிறைவடைந்தது. இந்த நிலையில் இன்றைய தினம் இரண்டாம் கட்ட வாக்குப் பதிவு தொடங்கியது. இதற்கான இறுதி கட்ட பிரச்சாரம் நேற்று முன் தினம் ஓய்ந்தது.
இன்று மொத்தம் 93 தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெறுகிறது. இந்த தேர்தலில் பாஜக, காங்கிரஸ், ஆம் ஆத்மி உள்ளிட்ட கட்சிகள் போட்டியிடுகின்றன. பா.ஜனதா, காங்கிரஸ், ஆம் ஆத்மி உள்பட 61 கட்சிகளின் வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.
அந்தவகையில் 285 சுயேச்சைகள் உள்பட 833 பேர் களத்தில் இருக்கிறார்கள். தேர்தல் நடைபெறும் 93 தொகுதிகளிலும் பா.ஜனதா மற்றும் ஆம் ஆத்மி கட்சிகள் வேட்பாளர்களை களமிறக்கி உள்ளன. காங்கிரஸ் கட்சி 90 இடங்களிலும், அதன் கூட்டணி கட்சியான தேசியவாத காங்கிரஸ் 2 தொகுதிகளிலும் வேட்பாளரை நிறுத்தி உள்ளன. பிற கட்சிகளில் முக்கியமாக பாரதிய பழங்குடியினர் கட்சி 12 தொகுதிகளிலும், பகுஜன் சமாஜ் கட்சி 44 தொகுதிகளிலும் களம் காண்கின்றன.

ஒவைசியின் அகில இந்திய மஜ்லீஸ் கட்சியும் கணிசமான இடங்களில் போட்டியிடுகிறது. மாநில முதல்-மந்திரி பூபேந்திர படேல் (காட்லோடியா தொகுதி), படேல் இன தலைவர் ஹர்திக் படேல் (விரம்கம்), அல்பேஷ் தகோர் (காந்திநகர் தெற்கு), தலித் பிரிவு தலைவர் ஜிக்னேஷ் மேவானி (வட்காம்), எதிர்க்கட்சித்தலைவர் சுக்ராம் ரத்வா (ஜெட்பூர்) உள்ளிட்டோர் இன்று முக்கிய வேட்பாளர்கள் ஆவர்.
அமைதியான முறையில் வாக்களிப்பதற்காக மேற்படி தொகுதிகளில் 14,975 வாக்குப்பதிவு மையங்கள் அமைக்கப்பட்டு உள்ளன. இவற்றில் 1.13 லட்சம் ஊழியர்கள் பணியமர்த்தப்பட்டு இருக்கின்றனர். இவர்கள் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களுடன் அந்தந்த வாக்குச்சாவடிகளுக்கு நேற்று அனுப்பி வைக்கப்பட்டனர்.
சபர்மதி தொகுதியில் ராணிப்பில் உள்ள நிஷான் பப்ளிக் பள்ளிக்கு வருகை தந்த பிரதமர் மோடி, வாக்கு சாவடிக்கு நடந்து சென்றார். அங்கு வரிசையில் காத்திருந்து வாக்களித்தார். அவருக்கு முன்பு ஒரு பெண் வாக்களிக்க வரிசையில் நின்றிருந்தார். அப்போது அந்த பெண் பிரதமரை வாக்களிக்குமாறு கூறினார். ஆனால் அவரோ வரிசைபடி நீங்கள் முதலில் வாக்களியுங்கள் என கூறினார். அந்த பெண் வாக்களித்த பிறகு பிரதமர் மோடி வாக்களித்தார். இந்த தொகுதி பாஜகவின் கோட்டை என சொல்லப்படுகிறது. இந்த கோட்டையில்தான் பிரதமர் மோடி வாக்களித்தார்.
அது போல் மத்திய அமைச்சர் அமித்ஷாவும் அகமதாபாத்தில் உள்ள வாக்குச் சாவடியில் வாக்களித்தார். காலை 9 மணி நிலவரப்படி, அதாவது வாக்குப் பதிவு தொடங்கிய 1 மணி நேரத்தில் 4.6 சதவீத வாக்குகள் பதிவாகியிருந்தன. காலை 11 அளவில் 19.06 சதவீத வாக்குகள் பதிவாகியிருந்தன. அது போல் பகல் 1 மணி அளவில் 34.74 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.
-
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
நோட் பண்ணுங்க! கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கு 'செக்' - ரேஷன் கார்டில் இதை கவனிக்கலைன்னா பணம் கட்? -
கழுத்தறுத்த பாஜக..சரண்டராகும் சரத்குமார்! பஞ்சாயத்தை கூட்டிய நாட்டாமை குடும்பத்தார்! பரபர பாலிடிக்ஸ் -
பென்டகன் பிளான் ரெடி.. ஈரானுக்குள் நுழையும் அமெரிக்க வீரர்கள்! கதை மொத்தமா முடியுது! -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
பாஜக நட்சத்திர பேச்சாளர் பட்டியலில் இருந்து தமிழிசை பெயர் நீக்கம்.. பின்னணி இதுதானா? -
தப்புக் கணக்கான ராதிகாவின் முடிவு? மீண்டும் சமத்துவ மக்கள் கட்சியை தொடங்குகிறாரா சரத்குமார்? -
கெத்து காட்டும் இந்தியா.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க இந்திய கப்பல்களுக்கு தனிப்பாதை கொடுத்த ஈரான்.. செம -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை! -
துபாய் உட்பட.. மொத்த வளைகுடா நாடுகளிலும் குடிநீர் பஞ்சம் ஏற்படும் அபாயம்! ஈரான் எச்சரிக்கை!












Click it and Unblock the Notifications