Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

குஜராத் சட்டசபை தேர்தல்.. விறுவிறு 2ஆம் கட்ட வாக்கு பதிவு.. பகல் 1 மணி வரை 34% வாக்குகள் பதிவு

Subscribe to Oneindia Tamil

அகமதாபாத்: குஜராத் சட்டசபைக்கான இரண்டாம் மற்றும் இறுதி கட்ட வாக்குப் பதிவு தொடங்கிய நிலையில் பகல் 1 மணி நிலவரப்படி 34 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

182 சட்டசபைக்கான தேர்தல் டிசம்பர் 1, டிசம்பர் 5 ஆகிய தேதிகளில் இரு கட்டங்களாக நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டது. அதன்படி முதற்கட்ட வாக்குப் பதிவு கடந்த 1ஆம் தேதி நடைபெற்றது. இந்த தேர்தலில் 63.31 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளன.

Today is the last phase of polling conducted for Gujarat assembly election 2022

மொத்தம் 89 தொகுதிகளுக்கு வாக்குப் பதிவு நிறைவடைந்தது. இந்த நிலையில் இன்றைய தினம் இரண்டாம் கட்ட வாக்குப் பதிவு தொடங்கியது. இதற்கான இறுதி கட்ட பிரச்சாரம் நேற்று முன் தினம் ஓய்ந்தது.

இன்று மொத்தம் 93 தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெறுகிறது. இந்த தேர்தலில் பாஜக, காங்கிரஸ், ஆம் ஆத்மி உள்ளிட்ட கட்சிகள் போட்டியிடுகின்றன. பா.ஜனதா, காங்கிரஸ், ஆம் ஆத்மி உள்பட 61 கட்சிகளின் வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.

அந்தவகையில் 285 சுயேச்சைகள் உள்பட 833 பேர் களத்தில் இருக்கிறார்கள். தேர்தல் நடைபெறும் 93 தொகுதிகளிலும் பா.ஜனதா மற்றும் ஆம் ஆத்மி கட்சிகள் வேட்பாளர்களை களமிறக்கி உள்ளன. காங்கிரஸ் கட்சி 90 இடங்களிலும், அதன் கூட்டணி கட்சியான தேசியவாத காங்கிரஸ் 2 தொகுதிகளிலும் வேட்பாளரை நிறுத்தி உள்ளன. பிற கட்சிகளில் முக்கியமாக பாரதிய பழங்குடியினர் கட்சி 12 தொகுதிகளிலும், பகுஜன் சமாஜ் கட்சி 44 தொகுதிகளிலும் களம் காண்கின்றன.

Today is the last phase of polling conducted for Gujarat assembly election 2022

ஒவைசியின் அகில இந்திய மஜ்லீஸ் கட்சியும் கணிசமான இடங்களில் போட்டியிடுகிறது. மாநில முதல்-மந்திரி பூபேந்திர படேல் (காட்லோடியா தொகுதி), படேல் இன தலைவர் ஹர்திக் படேல் (விரம்கம்), அல்பேஷ் தகோர் (காந்திநகர் தெற்கு), தலித் பிரிவு தலைவர் ஜிக்னேஷ் மேவானி (வட்காம்), எதிர்க்கட்சித்தலைவர் சுக்ராம் ரத்வா (ஜெட்பூர்) உள்ளிட்டோர் இன்று முக்கிய வேட்பாளர்கள் ஆவர்.

அமைதியான முறையில் வாக்களிப்பதற்காக மேற்படி தொகுதிகளில் 14,975 வாக்குப்பதிவு மையங்கள் அமைக்கப்பட்டு உள்ளன. இவற்றில் 1.13 லட்சம் ஊழியர்கள் பணியமர்த்தப்பட்டு இருக்கின்றனர். இவர்கள் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களுடன் அந்தந்த வாக்குச்சாவடிகளுக்கு நேற்று அனுப்பி வைக்கப்பட்டனர்.

சபர்மதி தொகுதியில் ராணிப்பில் உள்ள நிஷான் பப்ளிக் பள்ளிக்கு வருகை தந்த பிரதமர் மோடி, வாக்கு சாவடிக்கு நடந்து சென்றார். அங்கு வரிசையில் காத்திருந்து வாக்களித்தார். அவருக்கு முன்பு ஒரு பெண் வாக்களிக்க வரிசையில் நின்றிருந்தார். அப்போது அந்த பெண் பிரதமரை வாக்களிக்குமாறு கூறினார். ஆனால் அவரோ வரிசைபடி நீங்கள் முதலில் வாக்களியுங்கள் என கூறினார். அந்த பெண் வாக்களித்த பிறகு பிரதமர் மோடி வாக்களித்தார். இந்த தொகுதி பாஜகவின் கோட்டை என சொல்லப்படுகிறது. இந்த கோட்டையில்தான் பிரதமர் மோடி வாக்களித்தார்.

அது போல் மத்திய அமைச்சர் அமித்ஷாவும் அகமதாபாத்தில் உள்ள வாக்குச் சாவடியில் வாக்களித்தார். காலை 9 மணி நிலவரப்படி, அதாவது வாக்குப் பதிவு தொடங்கிய 1 மணி நேரத்தில் 4.6 சதவீத வாக்குகள் பதிவாகியிருந்தன. காலை 11 அளவில் 19.06 சதவீத வாக்குகள் பதிவாகியிருந்தன. அது போல் பகல் 1 மணி அளவில் 34.74 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+