For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ரூபாய் நோட்டு தட்டுப்பாடு: நாடு முழுவதும் சுங்க கட்டணங்கள் நவ. 18 நள்ளிரவு வரை ரத்து!

சுங்க கட்டணங்கள் நவம்பர் 18-ந் தேதி நள்ளிரவு வரை ரத்து செய்யப்பட்டுள்ளது.

By Mathi
Google Oneindia Tamil News

டெல்லி: நாடு முழுவதும் தேசிய நெடுஞ்சாலைகளில் நவம்பர் 18-ந் தேதி வரை சுங்க கட்டணத்தை ரத்து செய்து மத்திய அரசு அறிவித்துள்ளது.

நவம்பர் 8-ந் தேதி நள்ளிரவு முதல் ரூ500, ரூ1,000 நோட்டுகள் செல்லாது என பிரதமர் மோடி அறிவித்தார். இதனையடுத்து நாடு தழுவிய அளவில் பணப்புழக்கம் தடைபட்டுப் போயுள்ளது.

Toll suspension extends till 18th Nov

பழைய ரூபாய் நோட்டுகளை மாற்ற முடியாமலும் தேவைக்கேற்ப வங்கி மற்றும் ஏடிஎம்களில் பணத்தை எடுக்க முடியாமலும் 1 வாரகாலமாக பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். இதனால் நாடு தழுவிய அளவில் சுங்கக் கட்டணங்களை ரத்து செய்வதாக மத்திய அரசு அறிவித்தது.

இந்த சுங்கக் கட்டண ரத்து இன்று நள்ளிரவு வரை நீட்டிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் மேலும் 4 நாட்களுக்கு அதாவது நவம்பர் 18-ந் தேதி வரை தேசிய நெடுஞ்சாலைகளில் சுங்க கட்டணங்கள் ரத்து செய்யப்படும் என்று மத்திய சாலை போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்காரி அறிவித்துள்ளார்.

English summary
Toll suspension for all national highways has been extended till midnight of 18th November
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X