Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

‛நாளை கழுதைக்கு தெய்வத்தின் பெயரை சூட்டுவர்’.. சீதா - அக்பர் சிங்கம் சர்ச்சையில் விஎச்பி பரபர வாதம்

Subscribe to Oneindia Tamil

கொல்கத்தா: சிங்கத்துக்கு ‛சீதா' என பெயர் வைப்பதில் உங்களுக்கு என்ன பிரச்சனை? என கொல்கத்தா உயர்நீதிமன்றம் கேட்டதற்கு, ‛நாளை கழுதைக்கும் தெய்வத்தின் பெயரை சூட்டலாம். அதனை தடுக்க வேண்டும். அதோடு சீதாவை தெய்வமாக வணங்குகிறோம். அவர் இருக்க வேண்டியது காட்டில் அல்ல கோவிலில்'' என விஷ்வ ஹிந்து பரிஷத் வழக்கறிஞர் பரபரப்பாக வாதாடினார். இதையடுத்து உயர்நீதிமன்றம் அரசுக்கு அதிரடியாக உத்தரவிட்டது.

மேற்கு வங்க மாநிலம் சிலிகுரியில் பெங்கால் சஃபாரி பூங்கா அமைந்துள்ளது. இந்த பூங்காவுக்கு பிப்ரவரி 12ம் தேதி ஒரு ஆண், ஒரு பெண் என மொத்தம் 2 சிங்கங்கள் கொண்டு வரப்பட்டன. விலங்கு மாற்ற நடவடிக்கையின் ஒருபகுதியாக இந்த 2 சிங்கங்கள் திரிபுராவின் செபஹிஜாலா உயிரியல் பூங்காவில் இருந்து சிலிகுரி பெங்கால் சஃபாரி பூங்காவுக்கு மாற்றம் செய்யப்பட்டது.

Tomorrow donkey may be named after some deity, VHP advocate says in Calcutta High Court against the naming of a lion as Sita

இதில் 7 வயதுள்ள ஆண் சிங்கத்துக்கு 'அக்பர்' என்றும், 6 வயது நிரம்பிய பெண் சிங்கத்துக்கு 'சீதா' என்றும் பெயர் சூட்டப்பட்டது. இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. மேலும் 2 சிங்கங்களை ஒன்றாக அடைக்கவும், அந்த சிங்கங்களின் பெயர்களை மாற்றம் செய்ய வேண்டும் என்றும் இந்து அமைப்பான விஎச்பி எனும் விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பு தெரிவித்தது.

மேலும் பெண் சிங்கத்துக்கு ‛சீதா' என பெயர் வைக்க எதிர்ப்பு தெரிவித்து விஸ்வ ஹிந்து பரிஷத் என்று இந்து அமைப்பு கொல்கத்தா உயர்நீதிமன்றத்தை நாடியது. இதுதொடர்பான மனுவில், ‛‛பிப்ரவரி 8ம் தேதி 2 சிங்கங்கள் கொண்டு சிலிகுரி பெங்கால் சஃபாரி பூங்காவுக்கு கொண்டு வரப்பட்டது. பெண் சிங்கத்திற்கு 'சீதா' என்று பெயரிட்டுள்ளார். சிங்கத்திற்கு 'சீதா' என்ற பெயரை பயன்படுத்துவதன் மூலம் சனாதன தர்மத்தின் மத உணர்வுகளைப் புண்படுத்தும் நோக்கம் இருக்கிறது.

சிங்கத்துக்கு ‛சீதா' என பெயர் வைப்பது நியாயமற்றது. இது இந்து மத உணர்வுகளை புண்படுத்தும் வகையில் உள்ளது. மேலும் கடவுளின் பெயரை சிங்கத்துக்கு வைப்பது என்பது தெய்வ நிந்தனை செய்வதற்கு சமமானதாகும்'' என தெரிவிக்கப்பட்டு இருந்தது. இந்த மனுவை கொல்கத்தா உயர்நீதிமன்ற நீதிபதி சவுகதா பட்டாச்சார்யா விசாரித்தார்.

அப்போது, ‛‛பாசத்தின் அடிப்படையில் சிங்கங்களுக்கு இப்படி பெயர் சூட்டலாம். அதனை எப்படி நீங்கள் அவதூறு என நினைக்கலாம். இது ஒவ்வொருவரின் மனநிலையை பொறுத்து மாறுபடும். சிங்கத்துக்கு சீதா என பெயர் வைப்பதில் உங்களுக்கு என்ன சிரமம் இருக்கிறது'' என கேள்வி எழுப்பினார். அதற்கு விஷ்வ ஹிந்து பரிஷத் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் பதிலளித்தார்.

அப்போது, ‛சீதாவை நாங்கள் தெய்வமாக வழிப்பட்டு வருகிறோம். சிங்கத்துக்கு சீதா என பெயரிட்டது இந்து மத உணர்வை புண்படுத்தும் வகையில் உள்ளது. இன்று சிங்கத்துக்கு இப்படி பெயர் வைத்தவர்கள் நாளை கழுதைக்கு ஏதாவது தெய்வத்தின் பெயரை வைக்கலாம். இதனை தடுக்க வேண்டும். மேலும் நாங்கள் சீதாவை வணங்குகிறோம். அவர் கோவிலில் தான் இருக்க வேண்டும். காட்டில் அல்ல'' என வாதிட்டார்.

இந்த சந்தர்ப்பத்தில், ‛‛இந்து தெய்வமான துர்கா தேவியின் காலடியில் சிங்கம் உள்ளது. துர்கா பூஜையின்போது சிங்கம் இடம்பெறுகிறது. இந்த சிங்கமும் அனைவராலும் வணங்கப்படுகிறதே?.'' என கேள்வி எழுப்பினார். அதற்கு, விஎச்பி வழக்கறிஞர், ‛‛சிங்கம் துர்கா தேவியின் காலடியில் இருப்பது உண்மை தான். அது தீயவர்களை விரட்டி தீமையை தடுப்பதற்காக தான். மேலும் சிங்கத்துக்கு பெயர் வைத்து வழிபடுவது இல்லை. சிங்கத்தை வணங்கும் வகையில் பூஜைகளில் எந்த மந்திரங்களும் உச்சரிக்கப்படுவது இல்லை'' என்றார்.

இதையடுத்து அரசு தரப்பில் ஆஜரான கூடுதல் அட்வகேட் ஜெனரல் தேப்ஜோதி சவுத்ரி, ‛‛நாங்கள் சிங்கங்கள் உள்பட பிற விலங்களுக்கு எந்த பெயரும் வைக்கவில்லை'' என்றார். இதை கேட்ட நீதிபதி அரசு சார்பில் அறிக்கை தாக்கல் செய்யும்படி உத்தரவிட்டு வழக்கை இன்று ஒத்திவைத்தார். இந்த வழக்கு இன்று மீண்டும் கொல்கத்தா உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வர உள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+