கேரளாவுக்கு 'டூர்' வந்த குஜராத் இளம்பெண்ணை மிதித்துக் கொன்ற யானை
இடுக்கி: கேரளாவில் குஜராத்தைச் சேர்ந்த பெண் சுற்றுலாப் பயணியை யானை மிதித்துக் கொன்றுள்ளது.
குஜராத் மாநிலம் நர்மதா மாவட்டத்தில் உள்ள நான்தத்தைச் சேர்ந்தவர் தீபாலி(27). அவர் கேரளாவுக்கு சுற்றுப்பயணம் வந்தார். இடுக்கி மாவட்டம் மூணார் அருகே உள்ள இருட்டுக்கானத்திற்கு சென்று சுற்றிப் பார்த்தார்.

அப்போது அவர் தனியாருக்கு சொந்தமான யானை சவாரி பூங்காவுக்கு இன்று சென்றார். அங்கு அவர் யானையை போட்டோ எடுக்க முயன்றார். அப்போது அந்த யானை தனது தும்பிக்கையால் அவரை தாக்கியது. இதில் நிலைதடுமாறி கீழே விழுந்த அவரை யானை மிதித்துக் கொன்றது.
இந்த சம்பவத்தால் அவருடன் வந்த சுற்றுலாப் பயணிகள் கடும் அதிர்ச்சி அடைந்தனர். தீபாலியின் உடல் அருகில் உள்ள அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. அவரது உடல் நாளை விமானம் மூலம் குஜராத்திற்கு அனுப்பி வைக்கப்படும் என்று போலீசார் தெரிவித்தனர்.
இடுக்கி மாவட்டத்தை சுற்றிப்பார்க்க தீபாலி 14 பேர் கொண்ட குழுவாக கேரளா வந்தார். வந்த இடத்தில் அவரை யானை கொலை செய்தது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
அமெரிக்கா இனி பிக்பாஸ் இல்லை.. நீங்க நம்பலைனாலும் அதான் நெசம்.. ஐக்கிய அரபு சகாப்தமும் வீழ்ந்தது! -
கள்ளக்குறிச்சியில் சினிமாவை மிஞ்சும் சம்பவம்.. காதல் கணவனுக்கு உயிருடன் கொள்ளி வைத்த அம்மு -
எங்களை எப்படியாவது காப்பாத்துங்க.. அமெரிக்கா - இந்தியாவிடம் கெஞ்சும் வங்கதேசம்.. ரஷ்யா உதவுமா? -
பாஜகவுடன் கூட்டணி அமைக்கலாமா? 98 தவெக மாவட்டச் செயலாளர்கள் ஆதரவு.. விஜய் எடுக்கப்போகும் முடிவு! -
சீனா அரண்டு நிற்குது.. மொத்த டிராகனுக்கும் சவால் விடும் தமிழ்நாட்டின் குட்டி சிட்டி.. ரியல் இன்ஜின்! -
வந்தாச்சு நீண்ட காலம் காத்திருந்த நல்ல செய்தி.. H-1b விசா கட்டுப்பாடுகள் நீக்கம்? புதிய மசோதா தாக்கல் -
இந்திய கப்பலுக்கு மட்டும் வழிவிட்ட ஈரான்.. ஹார்முஸ் ஜலசந்தியை கடந்து மும்பை வந்தடைந்த கப்பல் -
இந்திய வரலாற்றில் முதல்முறை.. தலைமைத் தேர்தல் ஆணையரை நீக்கக் கோரி நாடாளுமன்றத்தில் நோட்டீஸ்! -
கையில் இவ்வளவு பெரிய.. ஆயுதத்தை வைத்துக்கொண்டுதான்.. ஈரான் இவ்வளவு நாள் சைலண்ட்டா இருந்ததா.. மாஸ் -
இந்திய கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க அனுமதியா? ஈரான் மறுப்பு.. ஆனாலும் நடந்த ட்விஸ்ட் -
அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்.. வெயிட்டான பதவியை கொடுக்கும் எடப்பாடி -
ஏப்ரல் 20க்கு பின் தமிழக சட்டசபைத் தேர்தல்.. மே மாதத்தில் வாக்கு எண்ணிக்கை? டெல்லியில் இன்று ஆலோசனை












Click it and Unblock the Notifications