கேரளாவுக்கு 'டூர்' வந்த குஜராத் இளம்பெண்ணை மிதித்துக் கொன்ற யானை
இடுக்கி: கேரளாவில் குஜராத்தைச் சேர்ந்த பெண் சுற்றுலாப் பயணியை யானை மிதித்துக் கொன்றுள்ளது.
குஜராத் மாநிலம் நர்மதா மாவட்டத்தில் உள்ள நான்தத்தைச் சேர்ந்தவர் தீபாலி(27). அவர் கேரளாவுக்கு சுற்றுப்பயணம் வந்தார். இடுக்கி மாவட்டம் மூணார் அருகே உள்ள இருட்டுக்கானத்திற்கு சென்று சுற்றிப் பார்த்தார்.

அப்போது அவர் தனியாருக்கு சொந்தமான யானை சவாரி பூங்காவுக்கு இன்று சென்றார். அங்கு அவர் யானையை போட்டோ எடுக்க முயன்றார். அப்போது அந்த யானை தனது தும்பிக்கையால் அவரை தாக்கியது. இதில் நிலைதடுமாறி கீழே விழுந்த அவரை யானை மிதித்துக் கொன்றது.
இந்த சம்பவத்தால் அவருடன் வந்த சுற்றுலாப் பயணிகள் கடும் அதிர்ச்சி அடைந்தனர். தீபாலியின் உடல் அருகில் உள்ள அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. அவரது உடல் நாளை விமானம் மூலம் குஜராத்திற்கு அனுப்பி வைக்கப்படும் என்று போலீசார் தெரிவித்தனர்.
இடுக்கி மாவட்டத்தை சுற்றிப்பார்க்க தீபாலி 14 பேர் கொண்ட குழுவாக கேரளா வந்தார். வந்த இடத்தில் அவரை யானை கொலை செய்தது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications