கேரளாவில் மத்திய அரசைக் கண்டித்து முழு அடைப்புப் போராட்டம்: போக்குவரத்து முடக்கம்
கேரளாவில் மத்திய அரசைக் கண்டித்து நடந்து வரும் முழு அடைப்புப் போராட்டத்தால் அங்கு இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
திருவனந்தபுரம் : கேரளாவில் மத்திய அரசைக் கண்டித்து தொழிற்சங்கங்களின் வேலைநிறுத்தப் போராட்டத்திற்கு அனைத்து வர்த்தக சங்கங்களும் ஆதரவு தெரிவித்திருப்பதை அடுத்து, கேரளாவில் முழு கடையடைப்பு போராட்டம் நடந்து வருகிறது. இதனால் அங்கு இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
நிரந்தரத் தொழிலாளர்கள் சட்டத்தில் மத்திய அரசு புதிய திருத்தத்தை மேற்கொண்டது. அதன்படி, தனியார் துறைகளில் தொழிலாளர்கள் நிரந்தரமாக வேலை செய்யமுடியாது என்றும், எப்போது வேண்டுமானாலும் நோட்டீஸ் கொடுத்து அவர்களை நிர்வாகம் பணிநீக்கம் செய்ய முடியும் என்றும் அந்த சட்டதிருத்தத்தில் கூறப்பட்டுள்ளது.

இதற்கு நாடு முழுவதும் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இந்நிலையில், இந்த சட்டத்தை வாபஸ் பெறக்கோரி கேரளாவில் இன்று அனைத்து தொழிற்சங்கங்களும் வேலைநிறுத்தப் போராட்டத்தில் இறங்கியுள்ளன.
24 மணி நேரம் நடக்கும் இந்த அனைத்துக் கடையடைப்பு போராட்டத்தில் கேரளாவில் அனைத்து தொழிற்சங்கங்களும் கலந்து கொண்டுள்ளன. பாஜக ஆதரவு நிலைப்பாடு கொண்ட பாரதிய மஸ்தூர் சங் இயக்கம் மட்டும் கலந்துகொள்ளவில்லை.

இதனையடுத்து கேரளாவில் போக்குவரத்து முற்றிலுமாக பாதிக்கப்பட்டுள்ளதால், பொதுமக்கள் வீடுகளிலேயே முடங்கியுள்ளனர். இதனால் இயல்பு வாழ்க்கை முற்றிலுமாக பாதிக்கப்பட்டுள்ளது. அனைத்து மத்திய அரசு அலுவலகங்களின் முன்னால் போராட்டம் நடத்திய தொழிற்சங்கங்கள் அழைப்பு விடுத்துள்ளன.

கேரளாவில் இன்று நடக்க இருந்த பள்ளி, கல்லூரித் தேர்வுகள் தள்ளிவைக்கப்பட்டு கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. கேரளாவுக்குள் செல்லும் தமிழகப் பேருந்து தமிழக எல்லையிலேயே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இதனால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.
-
ராகுல் களத்தில் இறங்கியவுடன் காங்கிரஸுக்கு நல்ல செய்தி! கேரளாவில் மாபெரும் வெற்றி உறுதி! புதிய சர்வே -
கைக்கு வரும் சம்பளம் குறைகிறதா? புதிய தொழிலாளர் சட்டம் அமலுக்கு வந்தது.. என்னென்ன மாறும்? -
இனி E-20 petrol தான்.. பங்குகளுக்கு பறந்த உத்தரவு! பழைய வண்டிக்காரங்களுக்கு காத்திருக்கும் சிக்கல்! -
இரண்டாக உடையும் வானம்.. இடி, மின்னலுடன் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
பல லட்சம் ஊழியர்களுக்கு.. அடுத்தடுத்து கணக்கில் வரும் ரூ.3000.. யாருக்கு கிடைக்கும்? என்ன காரணம்? -
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
மூட்டை மூட்டையாக போய் தங்கத்தை அடகு வைக்கும் மக்கள்.. வெளியான ஷாக் தகவல்.. இப்படி ஒரு காரணமா? -
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
தமிழ் புத்தாண்டு ராசி பலன்: அஷ்டமசனியில் அதிர்ஷ்டத்தை அள்ளும் சிம்ம ராசி.. காதலில் வெற்றி கன்ஃபார்ம் -
சென்னையில் ரூ.36 கோடி கோடிக்கு வீடு வாங்கிய நகை கடைக்காரர்.. அதுவும் இந்த ஏரியாவில்..!!












Click it and Unblock the Notifications