நீ அரவாணி.. வெளியே போ... வாடகை வீட்டிலிருந்து துரத்தப்பட்ட சினிமா இயக்குநர்
மும்பை: மும்பையில் கடந்த 3 மாதமாக வாடகை வீட்டில் வசித்து வந்த அரவாணி ஒருவரை, வாடகை ஒப்பந்த காலம் முடிவதற்கு முன்பாகவே கட்டாயப்படுத்தி வெளியேற்றியுள்ளார் வீட்டு உரிமையாளர்.
ஜோ பால் என்ற அந்த அரவாணி கடந்த 3 மாதமாக அந்த வீட்டில் வாடகைக்கு வசித்து வந்தார். இதுகுறித்து ஜோ பால் கூறுகையில், நான் முறையாக வாடகை ஒப்பந்தம் போட்டுத்தான் குடி வந்தேன். வந்த 3 மாதத்திலேயே என்னை டார்ச்சர் செய்து வெளியேற்றி விட்டார்கள் என்றார்.

குடும்பங்கள் வசிக்கும் குடியிருப்பு என்பதால் உங்களைப் போன்ற அரவாணிகளை இங்கு குடி வைக்க முடியாது என்று ஜோ பாலிடம், வீட்டு உரிமையாளர் காரணம் கூறினாராம். ஜோ பால் ஒரு திரைப்பட இயக்குநர் என்பது குறிப்பிடத்தக்கது.
தன்னை இந்த வீட்டில் குடி வைக்க உதவிய வீட்டு புரோக்கர் மற்றும் வீட்டு உரிமையாளர் மீது தான் வழக்குப் போடப் போவதாக ஜோ பால் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications