குஷ்புக்கு எதுக்கு கோயில்?... ஆந்திர முதல்வரின் சேவைக்காக கோயில் கட்டும் திருநங்கைகள்!
ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவிற்கு கோயில் கட்டுவதற்காக திருநங்கைகள் அடிக்கல் நாட்டியுள்ளனர்.
ஹைதராபாத்: ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவுக்கு கோயில் கட்டுவதற்காக திருநங்கைகள் ஒன்று கூடி பூமி பூஜை செய்து அடிக்கல் நாட்டி கட்டுமானப் பணிகளையும் தொடங்கியுள்ளனர்.
ஆந்திர வரலாற்றிலேயே முதன்முறையாக அந்த மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடுவுக்கு கோயில் கட்ட திருநங்கைகள் முடிவு செய்துள்ளனர். கோயிலுக்குள் சந்திரபாபு நாயுடுவின் வெள்ளி சிலை வைக்கப்பட உள்ளது. சமந்தா ஹிஜ்ராஸ் ஹக்குலா ஐக்கிய போராட்ட வேதிகா அமைப்பு நாண்டியால் பகுதியில் இந்த கோயிலை கட்ட உள்ளனர். உயிரோடு இருக்கும் ஒரு அரசியல் தலைவருக்காக கோயில் கட்டப்பட உள்ளது.

கோயிலுக்கான அடிக்கல் நாட்டு விழாவை ஆந்திர சுற்றுலாத்துறை அமைச்சர் பூமா அகிலா பிரியா தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியின் போது மாவட்ட ஆட்சியர் சத்யநாராயணாவும் உடன் இருந்து கோயிலுக்கான அடிக்கல் நாட்டினார்.
நாண்டியால் பகுதியில் தேர்தல் பிரச்சாரத்தின் போது திருநங்கைகள் முன்வைத்த பெரும்பாலான கோரிக்கைகளுக்கு முதல்வர் சந்திரபாபு நாயுடு செவி சாய்த்ததாக திருநங்கைகள் கூறுகின்றனர். ஆந்திராவில் வாழும் திருநங்கைகளின் வாழ்க்கை மேம்பட திருநங்கைகளுக்கான ஓய்வூதிய திட்டம், இலவச வீடு மற்றம் இதர பல்வேறு நலத்திட்ட உதவிகளை சந்திரபாபு நாயுடு ஏற்படுத்திக் கொடுத்ததற்கு நன்றி தெரிவிக்கும் விதமாக திருநங்கைகள் இந்த கோயிலை கட்டுவதாக கூறியுள்ளனர்.
திருநங்கைகளுக்காக எந்த முதல்வரும் சிறந்த திட்டங்களை அறிவித்தது இல்லை என்றும், ரூ. 30 லட்சம் செலவில் கோயில் கட்டி தங்களது நன்றிக்கடனை வெளிக்காட்டப் போவதாகவும் திருநங்கைகள் மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளனர். தெலுங்குதேசம் கட்சியின் தலைவர் அபிருச்சி மது சந்திரபாபு நாயுடு வெள்ளி சிலைக்காக ரூ. 5 லட்சம் நிதி கொடுத்துள்ளார். 5 கிலோ எடையில் இந்த சிலை உருவாக்கப்பட்டு கோயிலில் நிறுவப்பட உள்ளது. இதே போன்று கோயில் கட்டுமானப் பணிக்காக கூடுதலாக ரூ. 5 லட்சத்தையும் அபிருச்சி வழங்கியுள்ளார்.
தமிழகத்தில் நடிகைகளுக்காக அவர்களது தீவிர ரசிகர்கள் கோயில் கட்டியதைத் தான் கேள்விபட்டிருக்கிறோம், ஆனால் முதல்முறையாக ஒரு முதல்வருக்காக அதுவும் சமூகத்தில் ஏளனமாக பார்க்கப்படும் திருநங்கைகள் கோயில் கட்டுவது கவனத்தை ஈர்த்துள்ளது. ஆந்திர வரலாற்றிலும் முதல்முறையாக அரசியல் தலைவருக்காக திருநங்கைகள் கட்டும் கோயில் இது என்றும் பேசப்படுகிறது.
-
கடவுள் முன் அனைவரும் சமம் எனும்போது விஐபி தரிசனம் ஏன்? தமிழ்நாடு அரசுக்கு சென்னை ஐகோர்ட் கேள்வி! -
திருச்செந்தூர் முருகன் கோயிலில் அர்ச்சகருக்கு தடை மட்டும் விதிக்கப்பட்டது ஏன்? அமைச்சர் விளக்கம்! -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
வெறும் 10 நிமிடங்கள்தான்.. உடனே வெளியே வந்த விஜய்! மோடி உடனான சந்திப்பில் இப்படி நடந்ததே இல்லை! -
“காங்கிரஸ், கம்யூனிஸ்ட்களை விமர்சிக்க அவர்களுக்கு துணிச்சல் இல்லை”.. திருமாவளவன் அட்டாக்! -
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி?












Click it and Unblock the Notifications