நிலநடுக்கத்தால் பீதி- வாரணாசியில் கெஜ்ரிவாலுக்கு எதிரான போராட்ட நெரிசலில் சிக்கி 2 பேர் பலி
Subscribe to Oneindia Tamil
டெல்லி: உத்தரப்பிரதேசத்தின் வாரணாசியில் நிலநடுக்க செய்தி பரவிய போது பேரணி ஒன்றில் நெரிசலில் சிக்கி இருவர் பலியானார்கள்.
டெல்லி உட்பட நாட்டின் பல நகரங்களில் இன்று காலை கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்க அதிர்வுகள் சுமார் 30 விநாடிகள் உணரப்பட்டுள்ளது.

இந்நிலையில் வாரணாசியில் குட்சேரி பகுதியில் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு எதிரான போராட்டத்தில் சிலர் ஈடுபட்டிருந்த போது, நிலநடுக்கம் குறித்த செய்தி வெளியாகி பீதி ஏற்பட்டுள்ளது.
அப்போது, வேகமாக கலைந்து செல்ல போராட்டக்காரர்கள் முயற்சித்த போது கூட்ட நெரிசலில் சிக்கி இருவர் பலியாகியுள்ளனர்.












Click it and Unblock the Notifications