மகளைப் பலாத்காரம் செய்ய முயற்சித்த இளைஞரை ஆணுறுப்பை வெட்டி கொடூரமாகக் கொன்ற தாய்!
திஸ்பூர்: தன்னையும், தன் மகளையும் பலாத்காரம் செய்ய முயற்சித்த இளைஞரைக் கொடூரமாகக் கொன்று, புதைத்த பழங்குடியினப் பெண்ணை அஸ்ஸாம் போலீசார் கைது செய்துள்ளனர்.
அஸ்ஸாம் மாநிலம் சாரியலி மாவட்டத்திலுள்ள பரஜுலி கிராமத்தைச் சேர்ந்தவர் கிருஷ்ணா என்ற இளைஞர். இவர் மீது ஏற்கனவே இரண்டு வழக்குகள் நிலுவையில் உள்ளன.
இந்நிலையில் கடந்த 4ம் தேதி நள்ளிரவில் திடீரென மாயமானார் கிருஷ்ணா. இது தொடர்பாக அவரது பெற்றோர் போலீசில் புகார் அளித்தனர். அதனைத் தொடர்ந்து போலீசாரின் விசாரணையில் அதே பகுதியைச் சேர்ந்த ரீட்டா மற்றும் அவரது கணவர் மீது சந்தேகம் ஏற்பட்டது.

மேற்கொண்டு அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் கிருஷ்ணாவைக் கொலை செய்தததை ஒப்புக் கொண்டார் ரீட்டா. போலீசாரிடம் அவர் அளித்த வாக்குமூலத்தில், ‘சம்பவத்தன்று நள்ளிரவில் கிருஷ்ணா ரீட்டாவையும், அவரது மகளையும் பலாத்காரம் செய்ய முயற்சித்ததாக' அவர் தெரிவித்துள்ளார்.
இதனால் தங்களைக் காப்பாற்றிக் கொள்ள கையில் கிடைத்த கோடாரியால் கிருஷ்ணாவைத் தாக்கியுள்ளார் ரீட்டா. இதில் கிருஷ்ணா மயக்கமடைந்து கீழே விழுந்துள்ளார். ஆனாலும், ஆத்திரம் தீராத ரீட்டா, கிருஷ்ணாவின் ஆணுறுப்பை துண்டுத்துண்டாக வெட்டியுள்ளார். பின்னர் அவரைக் கொலை செய்துள்ளார்.
அதனைத் தொடர்ந்து தனது கிராமத்திலுள்ள ஏழு பெண்களை அழைத்து வந்து, நடந்த சம்பவங்களை விளக்கியுள்ளார். பின்னர் அவர்களது உதவியுடன் கிருஷ்ணாவின் உடலை புதைத்துள்ளனர்.
தற்போது உண்மையை ஒப்புக் கொண்டதைத் தொடர்ந்து ரீட்டாவையும், அவரது கணவரையும் நேற்று முன்தினம் போலீசார் கைது செய்தனர். பின்னர் கிருஷ்ணாவைப் புதைத்த இடத்தை ரீட்டா அடையாளம் காட்டினார். அதனைத் தொடர்ந்து கிருஷ்ணாவின் உடலைத் தோண்டியெடுத்த போலீசார், அதனை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications