Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

நாளை தேர்தல்..திரிபுராவில் மீண்டும் பாஜக ஆட்சி! கலங்கும் மா.கம்யூ-காங். கூட்டணி! பரபர கருத்துகணிப்பு

திரிபுராவில் உள்ள 60 சட்டசபை தொகுதிகளுக்கு நாளை ஒரேகட்டமாக சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில் தான் தேர்தலுக்கு முந்தைய ஜான் கி பாத் கருத்து கணிப்பில் மீண்டும் பாஜக ஆட்சியை தக்க வைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Subscribe to Oneindia Tamil

அகர்தலா: திரிபுராவில் பாஜக ஆட்சி நடந்து வரும் நிலையில் நாளை சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகள் அங்கு தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில் தேர்தலுக்கு முந்தைய ‛ஜான் கி பாத்' கருத்து கணிப்பு வெளியாகி உள்ளது. இதில் பாஜக 35 இடங்களில் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியை பிடிக்கும் எனவும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், காங்கிரஸ் கூட்டணிக்கு அதிகபட்சமாக 16 இடங்கள் மட்டுமே நடக்கும் என அந்த கருத்து கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கு ஒரு இடத்தில் கூட வெற்றி வாய்ப்பு இல்லை எனவும் அந்த கருத்து கணிப்பு தெரிவித்துள்ளது.

இந்தியாவில் இந்த ஆண்டில் மட்டும் 9 மாநிலங்களுக்கு சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. அதன்படி திரிபுரா, மேகாலயா, நாகலாந்து, மிசோராம், கர்நாடகா, சத்தீஸ்கர், மத்திய பிரதேசம், ராஜஸ்தான், தெலங்கானா மாநிலங்கள் இந்த ஆண்டு தேர்தலை சந்திக்கின்றன. முதற்கட்டமாக வடகிழக்கு மாநிலங்களான நாகலாந்து, மேகாலயா, திரிபுரா மாநிலங்களுக்கு சட்டசபை தேர்தல்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

இதில் 2023ல் முதல் முதலாக திரிபுராவில் நாளை சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. அதன்பிறகு நாகலாந்து, மேகாலயா மாநிலங்களில் பிப்ரவரி 27ல் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இந்த 3 மாநில தேர்தல்களில் பதிவாகும் ஓட்டுக்கள் மார்ச் 2ல் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன.

திரிபுராவில் பாஜக ஆட்சி

திரிபுராவில் பாஜக ஆட்சி

திரிபுராவில் மொத்தம் 60 தொகுதிகள் உள்ள நிலையில் தற்போது பாஜக 36 இடங்களில் வெற்றி பெற்றது. பாஜக கூட்டணிக்கு மொத்தம் 44 பேர் எம்எல்ஏக்களாக உள்ள நிலையில் பாஜக முதல்வராக மானிக் சாகா உள்ளார். இந்நிலையில் தான் நாளை சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இதையொட்டி நேற்றுடன் பிரசாரம் முடிவடைந்தது.

4 முனை போட்டி

4 முனை போட்டி

திரிபுராவில் தற்போது நான்குமுனை போட்டி நிலவுகிறது. ஆளும் பாஜக-ஐபிஎப்டி கூட்டணி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்-காங்கிரஸ் கூட்டணி மற்றும் மாநில கட்சியான திப்ரோ மோத்தா கட்சி, மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி என மொத்தம் நான்குமுனை போட்டி நிலவுகிறது. மொத்தம் 60 தொகுதிகளல் 28.13 லட்சம் வாக்காளர்கள் உள்ள நிலையில் மொத்தம் 20 பெண்கள் உள்பட 259 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். இதில் பாஜக 55 இடங்களிலும், கூட்டணி கட்சியான ஐபிஎப்டி 5 இடங்களிலும் போட்டியிடுகிறது. மற்றொரு கூட்டணியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி 47 தொகுதிகளிலும், காங்கிரஸ் 13 தொகுதிகளிலும் போட்டியிடுகிறது. மாநில கட்சியான திப்ரா மோத்தா 42 தொகுதிகளில் வேட்பாளர்களை நிறுத்தி உள்ளது. இதுதுவிர திரிணாமுல் காங்கிரஸ் கட்சி 28 இடங்களிலும் போட்டியிடுகிறது.

ஜான் கி பாத் கருத்து கணிப்பு

ஜான் கி பாத் கருத்து கணிப்பு

இந்நிலையில் தான் ஓட்டுப்பதிவுக்கு முந்தைய கருத்து கணிப்பை ஜான்கிபாத் (Jan Ki Baat) மேற்கொண்டது. திரிபுராவில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் வசித்து வரும் 10 ஆயிரம் பேரிடம் ஜான் கிபாத் கருத்து கேட்டது. இந்த கருத்து கணிப்பின் முடிவுகள் தற்போது வெளியாகி உள்ளன. அதன்படி திரிபுராவில் மீண்டும் பாஜக ஆட்சியை பிடிக்கும் என ஜான் கி பாத் கருத்து கணிப்பு தெரிவித்துள்ளது.

மீண்டும் பாஜக ஆட்சி

மீண்டும் பாஜக ஆட்சி

அதாவது நடைபெற உள்ள தேர்தலில் பாஜக கூட்டணி 30 முதல் 35 இடங்களில் வெற்றி பெறும் எனவும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், காங்கிரஸ் கூட்டணி 13 முதல் 16 இடங்களில் வெற்றி பெறும் எனவும், திப்ரா மேமத்தா கட்சி 11 முதல் 13 இடங்களில் வெற்றி பெறும் எனவும், பிற கட்சி ஒரு இடத்தில் வாகை சூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த தேர்தலில் பாஜக கூட்டணி 39 முதல் 42 சதவீத ஓட்டுக்களை பெறும் எனவும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், காங்கிரஸ் கட்சி 38 முதல் 41 சதவீத ஓட்டுக்களை பெறும் எனவும், திப்ரா மோத்தா கட்சி 16 முதல் 21 சதவீத ஓட்டுக்களை பெறும் னெவும் மற்றவர்கள் 1 முதல் 2 சதவீத ஓட்டுகளை பெறுவார்கள் எனவும் கருத்து கணிப்பு தெரிவித்துள்ளது.

கடந்த முறை பலித்த கருத்து கணிப்பு

கடந்த முறை பலித்த கருத்து கணிப்பு

கடந்த 2018 தேர்தலின்போது நியூஸ் எக்ஸ் மற்றும் ஜான் கி பாத் இணைந்து திரிபுராவில் தேர்தலுக்கு முந்தைய கருத்து கணிப்பை வெளியிட்டது. இது அப்படியே நிகழ்ந்தது. அந்த கருத்து கணிப்பில் பாஜக 35 முதல் 45 இடங்களில் வெற்றி பெறும் என கூறப்பட்ட நிலையில் பாஜக 44 இடங்களை கைப்பற்றியது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி 14 முதல் 23 இடங்களை கைப்பற்றும் என தெரிவிக்கப்பட்ட நிலையில் அக்கட்சி 16 இடங்களை வென்றது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+