உத்தரகண்ட் வெள்ளம்: இறந்தவர்களின் குடும்பத்துக்கு ரூ.4 லட்சம் நிதி உதவி... மாநில முதல்வர் அறிவிப்பு!
டேராடூன்: உத்தரகண்ட் வெள்ளத்தில் இறந்தவர்களின் குடும்பத்துக்கு ரூ.4 லட்சம் நிதி உதவி வழங்கப்படும் என்று அந்த மாநில முதல்வர் திரிவேந்திர சிங் ராவத் கூறியுள்ளார்.
மத்திய அரசு அனைத்து உதவிகளையும் செய்யும் என பிரதமர் மோடி என்னிடம் உறுதி அளித்துள்ளார் என்று அவர் கூறியுள்ளார்.
உள்துறை அமைச்சர், குடியரசு தலைவரும் என்னிடம் தொலைபேசி மூலம் நிலைமையை கேட்டறிந்தனர் என்றும் திரிவேந்திர சிங் ராவத் தெரிவித்தார்.

திடீர் வெள்ளம்
உத்தரகண்ட் மாநிலத்தின் சமோலி மாவட்டத்தில் பனிப்பாறை ஒன்று திடீரென்று சரிந்து விழுந்ததது. இதனால் அங்குள்ள அலக்நந்தா தவுளிகங்கா நதிகளில் திடீரென்று வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து சுற்றியுள்ள பகுதிகளிலிருந்து ஆயிரக்கணக்கான மக்கள் அவசர அவசரமாக வெளியேற்றப்பட்டு வருகின்றனர்.

10 உடல்கள் மீட்பு
வெள்ளப்பெருக்கில் சிக்கி உயிரிழந்த 10 பேரின் உடல்கள் இதுவரை மீட்கப்பட்டுள்ளன. இந்த வெள்ளப் பெருக்கு காரணமாக ரைனி கிராமத்தில் தவுலி கங்கை நதிக்கரையில் இருந்த பல வீடுகள் அடித்துச் செல்லப்பட்டன. அங்கு தொடர்ந்து பல்வேறு மீட்பு படைகளின் மீட்பு பணிகள் நடந்து வருகின்றன.

16 தொழிலாளர்கள் மீட்பு
இந்த வெள்ளத்தால் சமோலி மாவட்டத்தில் தபோவனம் அணை அருகே சுரங்கத்தை வெள்ளம் சூழ்ந்தது. இந்த வெள்ளத்தில் சிக்கி இருந்த 16 தொழிலாளர்கள் பத்திரமாக மீட்கப்பட்டனர். இந்த நிலையில் உத்தரகண்ட் மாநில முதல்வர் திரிவேந்திர சிங் ராவத் அங்கு ஏற்பட்டுள்ள நிலைமை குறித்தும், மீட்பு பணிகள் குறித்தும் நிருபர்களுக்கு பேட்டியளித்தார்.

மோடி உறுதியளித்தார்
அப்போது அவர் கூறியதாவது:- உத்தரகண்டில் திடீரென ஏற்பட்ட இந்த வெள்ளம் மிகவும் துயரமானது. இந்த சம்பவம் தொடர்பாக மத்திய அரசு அனைத்து உதவிகளையும் செய்யும் என பிரதமர் மோடி என்னிடம் உறுதி அளித்துள்ளார். உள்துறை அமைச்சர், குடியரசு தலைவரும் என்னிடம் தொலைபேசி மூலம் நிலைமையை கேட்டறிந்தனர்.

ரூ.4 லட்சம் வழங்கப்படும்
இந்திய ராணுவம் சம்பவ இடத்தை அடைந்துள்ளது. உபகரணங்களுடன் 60 எஸ்.டி.ஆர்.எஃப் பணியாளர்கள் குழுவினர் வந்துள்ளனர். மீட்பு பணிகள் தொடர்ந்து முழு வீச்சில் நடந்து வருகிறது. உத்தரகண்ட் வெள்ளத்தில் இறந்தவர்களின் குடும்பத்துக்கு ரூ.4 லட்சம் நிதி உதவி வழங்கபப்டும்.

125 பேர் மாயமாகி உள்ளனர்
180 ஆடுகள் மற்றும் ஆடுகளுடன் மேய்ப்பர்கள் உட்பட ஐந்து உள்ளூர்வாசிகள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டனர். சுமார் 125 பேரைக் காணவில்லை என்று கருதுகிறோம். இந்த எண்ணிக்கை இன்னும் அதிகமாக இருக்கலாம் என அஞ்சுகிறோம் பனிப்பாறை வெடித்ததன் காரணத்தை வல்லுநர்கள் ஆராய்ந்து வருகின்றனர். ஆனால் அரசு இப்போது மக்களின் உயிரைக் காப்பாற்றுவதில் கவனம் செலுத்துகிறது என்று திரிவேந்திர சிங் ராவத் கூறியுள்ளார்.
-
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
வேலையில்லாத இளைஞர்களுக்கு அடிக்குது ஜாக்பாட்.. 'VIP' களுக்கு மாதம் ரூ.4000.. கையில் எடுக்கும் விஜய்! -
உதயநிதி ஸ்டாலின் கையில் காவேரி லிஸ்ட்.. ஜூன் 18ல் புள்ளிவிவர பதிலடியுடன் விஜய் போட்ட மாஸ்டர் பிளான் -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
3 மாசம் தாங்காது.. கடுகடுத்த ஸ்டாலின்! புகார் கூறிய அதிமுக! இன்று தவெக புஸ்ஸி ஆனந்த் முக்கிய முடிவு? -
விஜய்யின் கனவு திட்டம்.. கூவம், அடையாறு ஆறுகளை மாற்றப்போகும் மாஸ்டர்பிளான்.. கைகோர்க்கும் டெல்லி












Click it and Unblock the Notifications