யெஸ் பேங்க்-ல் திருப்பதி தேவஸ்தானத்தின் ரூ1,300 கோடி டெபாசிட் தப்பியது!
திருமலை: நிதி நெருக்கடியில் சிக்கியதால் ரிசர்வ் வங்கி கட்டுப்பாட்டில் வந்துள்ள யெஸ் பேங்கில் அண்மையில்தான் திருப்பதி தேவஸ்தானம் தமது ரூ1300 கோடி டெபாசிட் பணம் திரும்பப் பெற்றது என தகவல்கள் வெளியாகி உள்ளன.
Recommended Video
மத்திய பாஜக அரசின் மோசமான பொருளாதார கொள்கைகளால் நாட்டின் பொருளாதாரம் படுமோசமடைந்துள்ளது. வங்கிகள் திவாலாகிக் கொண்டிருக்கின்றன. இன்னொரு பக்கம் பெரும் முதலாளிகள் பொதுமக்கள் வங்கிகளில் டெபாசிட் செய்த பணத்தை கடன்கள் என்ற பெயரில் சூறையாடிவிட்டு வெளிநாடு தப்பிவிடுகின்றனர்.

இந்த வரிசையில் தற்போது யெஸ் பேங் இடம்பிடித்திருக்கிறது. வாரா கடன்களால் படுமோசமான நிதி நெருக்கடியில் சிக்கியது யெஸ் பேங்க். இதனால் யெஸ் பேங்கை ரிசர்வ் வங்கி தமது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்திருக்கிறது.
யெஸ் பேங்கில் இருந்து வாடிக்கையாளர்கள் ரூ50,000 மட்டுமே பணத்தை எடுக்க இயலும் என கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இது யெஸ் பேங்கில் டெபாசிட் செய்த முதலீட்டாளர்களை பெரும் பீதிக்குள்ளாக்கியிருக்கிறது.
இந்நிலையில் யெஸ் பேங்கில் திருப்பதி தேவஸ்தானம் டெபாசிட் செய்திருந்த ரூ1,300 கோடி தப்பியிருக்கிறது. அதாவது திருப்பதி தேவஸ்தான நிர்வாகத்தில் ஆந்திரா அரசாங்கம் மாற்றங்களைக் கொண்டு வந்தது. இதனையடுத்து தேவஸ்தானத்தின் டெபாசிட் தொகைகள் குறித்து ஆராயப்பட்டது.
அப்போது யெஸ் பேங்கின் நிதி நெருக்கடி அரசல் புரசலாக வெளிவர தொடங்கியும் இருந்தது. இதனால் முன்னெச்சரிக்கையாகவே ரூ1,300 கோடி டெபாசிட் பணத்தை திருப்பதி தேவஸ்தானம் சில மாதங்களுக்கு முன்னரே திருப்பி பெற்றுக் கொண்டது. தற்போதுதான் இத்தகவல் வெளியாகி இருக்கிறது.
-
அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்.. வெயிட்டான பதவியை கொடுக்கும் எடப்பாடி -
Gas bill: சென்னை பெருங்குடி ஹோட்டலில்! இட்லி, வடையுடன் கேஸ் சிலிண்டருக்கும் கட்டண வசூலா? உண்மை என்ன? -
திமுக மாணவரணி செயலாளராக முதல்முறையாக பெண் நிர்வாகி நியமனம்.. ராஜீவ் காந்தி திடீர் மாற்றம் -
அமெரிக்கா போட்ட தப்பு கணக்கு... ஈரான் விரித்த 'மொசைக்' வலை.. யார் இந்த முகமது அலி ஜாஃபரி? -
முகத்திற்கு நேராக மம்தா சொன்ன வார்த்தை! ஆளுநர் ரவியின் சிரிப்பு அப்படியே போச்சு! முதல் நாளே சம்பவம் -
160+ சீட்டில் எடப்பாடி பழனிசாமி யூடர்ன்.. சீனியர் லிஸ்ட்டை கிழித்து.. உளவுத்துறை மாஜி சொன்ன சீக்ரெட் -
2010ல் அதிமுக மாவட்ட பொறுப்பில் இருந்தேன்.. எடப்பாடியிடம் ஜனநாயகம் இருக்காம்.. காளியம்மாள் பேட்டி! -
ரஷ்யாவிற்கு சுக்கிர திசை.. அமெரிக்காவே திறந்து விட்ட புதிய வழி.. பல ஆயிரம் கோடி லாபம் கொட்டுகிறது -
தேமுதிகவால் திமுக கூட்டணியில் மற்ற கட்சிகளுக்கு நெருக்கடியா – ஒரே வார்த்தையில் முடித்த பிரேமலதா -
அமைதி வேண்டாம்! எங்களிடம் நீங்க நினைக்காத அஸ்திரம் உள்ளது! அதிர வைத்த புது சுப்ரீம் லீடரின் வார்னிங் -
தேமுதிக தொகுதிகளை குறைக்க திமுக பேச்சுவார்த்தை.. டென்ஷனில் பிரேமலதா விஜயகாந்த்.. ஸ்டாலினின் கேம்! -
உலகை கண்ட்ரோல் செய்யும் "நிழல்" கப்பல்கள்.. அப்போ நாம் கண்ணால் காண்பது எல்லாமே பொய்யா?












Click it and Unblock the Notifications