For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

வேலைக்கார சிறுமியை பார்க்க வைத்து சாப்பிட்ட ரேணுகா சவுத்ரி: ட்விட்டரில் மக்கள் கொந்தளிப்பு

By Siva
Google Oneindia Tamil News

டெல்லி: வேலைக்கார சிறுமியை பார்க்க வைத்து தனது குடும்பத்தோடு சாப்பிட்ட முன்னாள் மத்திய அமைச்சர் ரேணுகா சவுத்ரியை மக்கள் ட்விட்டரில் கடுமையாக விமர்சித்து வருகிறார்கள்.

முன்னாள் மத்திய அமைச்சர் ரேணுகா சவுத்ரி தனது குடும்பத்தாருடன் உணவகத்திற்கு சென்று சாப்பிட்டுள்ளார். அவர் தனது வீட்டு வேலைக்கார சிறுமியை உணவகத்திற்கு அழைத்துச் சென்று அவரை தனக்கு அருகில் நிற்க வைத்துவிட்டு அவரை பார்க்க வைத்து சாப்பிட்டுள்ளார்.

ரேணுகா வேலைக்கார சிறுமியிடம் இரக்கமின்றி நடந்து கொண்டுள்ளதாக மக்கள் ட்விட்டரில் விமர்சித்துள்ளனர்.

ரேணுகா

டியர் ரேணுகா சவுத்ரி, உங்கள் வீட்டு குழந்தையை கவனித்துக் கொள்ளும் சிறுமிக்கு உங்களால் உணவளிக்க முடியாவிட்டால் அவரை உணவகத்திற்கு அழைத்து வராதீர்கள் என ரிஷி ட்வீட்டியுள்ளார்.

வெட்கக்கேடு

#RenukaChaudhary, இது போன்ற அமைச்சர்கள் நம் எதிர்காலத்தை முடிவு செய்கிறார்கள். உங்களை நினைத்து வெட்கமாக உள்ளது என்று கொந்தளித்துள்ளார் நிகில்.

மனிதநேயம்

#RenukaChaudhary @RenukaChaudhary கொஞ்சம் மனிதநேயத்தை கற்றுக்கொள்ளுங்கள் என நவ்நீத் என்பவர் ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

இந்தியா

இது தான் நம் இந்தியா. அந்த சிறுமி ஏற்கனவே வீட்டில் சாப்பிட்டுவிட்டார் என்று ரேணுகா சவுத்ரி கூறுவார் பாருங்க என்கிறார் விஜய் வெங்கடரமணன்.

அமைச்சர்

பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை அமைச்சராக இருந்தவர் ரேணுகா சவுத்ரி. இந்தியா முழுவதும் உள்ள பெண்கள் நலனுக்கு பொறுப்பாக இருந்தவர்(அதிலும் ஏழை பெண்கள்) என அர்னாப் கங்குலி தெரிவித்துள்ளார்.

English summary
People are criticising former central minister Renuka Chaudhary on twitter for her merciless act.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X