Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஜஸ்ட் ஒரு மணி நேரம் தான்.. கொரோனாவால் அடுத்தடுத்து பலியான இரட்டையர்கள்… மீரட்டை உலுக்கிய சோகம்!

மீரட்டில் இரட்டை சகோதரர்கள் கொரோனாவுக்கு இறந்துள்ளனர்

Subscribe to Oneindia Tamil

லக்னோ: மீரட் நகரில் இரட்டை சகோதரர்கள் 2 பேர் அடுத்தடுத்து உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.. இருவருமே 24 வயதை எட்டிய இளைஞர்கள் ஆவர்..!
கேரளாவை சேர்ந்தவர் கிரிகோரி ரேமண்ட் ரபேல்.. இவரது மனைவி சோஜா.. இருவருமே ஆசிரியர்கள்.. மீரட்டில் உள்ள செயின்ட் தாமஸ் பள்ளியின் டீச்சர்களாக வேலை பார்த்து வேலை பார்த்து வருகிறார்கள்.

இவர்களுக்கு ஜோஃப்ரெட் வர்கீஸ் கிரிகோரி, ரால்பிரட் வர்கீஸ் கிரிகோரி என்ற இரட்டை மகன்களும், ஒரு மூத்த மகனும் உள்ளனர். இந்நிலையில், மே 13-ம் தேதி, கிரிகோரி தம்பதியினருக்கு அப்போது போன் ஒன்று வந்துள்ளது..

 ஆசிரியர்கள்

ஆசிரியர்கள்

இரட்டை மகன்களில் ஒருவரான ஜோஃப்ரெட் வர்கீஸ் கொரோனா தொற்று பாதிப்பால் உயிரிழந்துவிட்டதாகவும், இன்னொரு மகன், ரால்பிரட் வர்கீஸ் தொற்று பாதிப்பால் உயிருக்கு போராடிக் கொண்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது. இதைக் கேட்டு அதிர்ந்து போன தம்பதியினர், உடனடியாக கிளம்பி ஆஸ்பத்திரி சென்றனர்.. மகன் உயிரிழந்ததை நினைத்து கதறி கதறி அழுதனர்..

 சிகிச்சை

சிகிச்சை

பிறகு, சிகிச்சையில் உள்ள இன்னொரு மகனை பார்க்க வார்டுக்கு சென்றனர். அப்போது, அவர்களை பார்த்ததும், என்ன நடந்தது? ஏன்ம்மா இப்படி இருக்கீங்க? ஏதோ என்கிட்ட மறைக்கிறீங்க? என்று தன் அம்மாவிடம் கேட்டுக் கொண்டே இருந்தார்.. ஆனால், அடுத்த சில நிமிடங்களில் ரால்பிரட்டின் உயிர் பரிதாபமாக இருந்தது..

 இரட்டையர்கள்

இரட்டையர்கள்

இந்த இரட்டையர்கள் 3 நிமிட இடைவெளியில் பிறந்தவர்களாம்.. ஆனால், 1 மணி நேர இடைவெளியில் அடுத்தடுத்து உயிரிழந்துள்ளனர்.. இருமகன்களையும் பறிகொடுத்துவிட்டு, பெற்றோர் கதறி அழுதது காண்கோரை நிலைகுலைய வைத்துவிட்டது.

அப்பா

அப்பா

மகன்களை பறிகொடுத்த தந்தை இதை பற்றி சொல்லும்போது, "நாங்க ரொம்ப உடைந்து போயிருக்கோம்.. இரட்டைகள் 2 பேரும் யாருக்குமே எந்த ஒரு தீங்கும் நினைச்சது இல்லை.. ஏப்ரல் 23-ம்தேதி 2 பேருக்கும் ஒன்றாக காய்ச்சல் வந்துள்ளது.. காய்ச்சலுக்கு தொடர்ந்த சிகிச்சை எடுத்து வந்துள்ளனர்.. ஆனாலும் குணமாகவில்லை..

மீரட்

மீரட்

மே 1ம் தேதி, 2 பேருக்கும் ஆக்ஸிஜன் பிரச்சனை வந்தது.. இதையடுத்து, மீரட்டில் உள்ள ஆனந்த் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர்... வென்ட்டிலேட்டரில்தான் வைத்திருக்க முடிந்தது.. மே 10-ம்தேதி கொரோனா ரிப்போர்ட்டில் நெகட்டிவ் என்று வந்தது.. அதனால் கொஞ்சம் நிம்மதியாக இருந்தோம்.. அடுத்த 3 நாளில் இப்படி ஒரு கொடுமை நடந்துவிட்டது என்றார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+