தபோல்கர் வழக்கில் திருப்பம்- கொலையை 'ஒப்புக் கொள்ள' ரூ25 லட்சம் கொடுத்ததாக திடுக் தகவல்

மகாராஷ்டிராவை சேர்ந்த நரேந்திர தபோல்கர், சமூக சீர்திருத்த கருத்துகளை பரப்பும் பணியை மேற்கொண்டு வந்தார். மூடநம்பிக்கைகளுக்கு எதிராக கடுமையான போராடி வந்த அவர் மர்ம நபர்களால் கடந்த ஆண்டு ஆகஸ்ட் 20-ந் தேதி சுட்டுக் கொல்லப்பட்டார்.
ஆனால் அவரை கொலை செய்த கொலையாளிகள் யார் என்பது கண்டுபிடிக்கப்படாமல் இருந்து வந்தது. இது அம்மாநில அரசுக்கு நெருக்கடியையும் ஏற்படுத்தியது.
இந்நிலையில் திடீரென இந்த கொலை வழக்கில் மணீஷ் நகோரி உட்பட இருவர் கைது செய்யப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர். ஆனால் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டபோது மணீஷ் நகோரி என்பவர், தம்மை விசாரணை அதிகாரி ராகேஷ் மிஸ்ரா துன்புறுத்தியும் ரூ25 லட்சம் பணம் கொடுத்தும் இந்த கொலையை ஒப்புக் கொள்ள செய்ததாக தெரிவித்தார்.
மேலும் கொலை சம்பவம் நடைபெற்ற நாளில் தாம் மும்பையில் இருந்ததாகவும் நகோரி கூறியுள்ளார். அரசியல் நெருக்கடிகள் காரணமாக விசாரணை அதிகாரி இப்படி தம்மை துன்புறுத்தி நெருக்கடி கொடுத்ததாகவும் நகோரி கூறியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications