அஜ்மீர் தர்காவுக்கு வெளியே துப்பாக்கிச்சூடு: 2 பேர் காயம்
ஜெய்பூர்: அஜ்மீர் தர்காவுக்கு வெளியே இருவர் திடீர் என்று துப்பாக்கிச்சூடு நடத்தியதில் 2 பேர் காயம் அடைந்தனர்.
ராஜஸ்தான் மாநிலம் அஜ்மீரில் உள்ள குவாஜா மொய்னுதீன் சிஸ்தி தர்கா மிகவும் பிரபலம் ஆனது. பிரபலங்கள், அரசியல் தலைவர்கள், நடிகர்-நடிகைகள், மக்கள் என தினமும் ஏராளமானோர் தர்காவுக்கு வந்து செல்கிறார்கள்.

இந்நிலையில் கோட்டா நகரைச் சேர்ந்த அஸ்வனி குமார் சர்மா என்பவர் அஜ்மீர் தர்காவில் பிரார்த்தனை செய்துவிட்டு வெளியே வந்தார். அப்போது அவரது ஊரைச் சேர்ந்த விகாஸ் மற்றும் முகமது அப்ரேஜ் ஆகியோர் அவரை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். இதில் அஸ்வனி காயம் அடைந்தார். அஸ்வனிக்கு அப்ரேஜ் வைத்த குறி தவறியதால் விகாஸ் மீது குண்டுபாய்ந்து அவர் காயம் அடைந்தார்.
தர்காவில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் அப்ரேஜ் மற்றும் விகாஸை பிடித்தனர். காயம் அடைந்த அஸ்வனி அருகில் உள்ள அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
நண்பர்களாக இருந்த அப்ரேஜும், அஸ்வனியும் எதிரிகள் ஆகிவிட்டதாக போலீசார் தெரிவித்தனர்.












Click it and Unblock the Notifications