காஷ்மீரில் வீட்டில் பதுங்கியிருந்த 2 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை
ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் சொபோர் பகுதியில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் 2 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளனர்.
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் சொபோர் பகுதியில் உள்ள சைத்புரா கிராமத்தில் உள்ள ஒரு வீட்டில் தீவிரவாதிகள் பதுங்கியிருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து மத்திய ரிசர்வ் போலீஸ் படையினர், ராணுவத்தினர் மற்றும் மாநில போலீசார் அந்த வீட்டை சுற்றி வளைத்தனர்.
இதை பார்த்த தீவிரவாதிகள் ராணுவத்தினர் உள்ளிட்டோரை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். பதிலுக்கு ராணுவத்தினர் உள்ளிட்டோரும் துப்பாக்கியால் சுட்டனர். இந்த துப்பாக்கிச்சூட்டில் வீட்டுக்குள் பதுங்கி இருந்த ஜெய்ஷ் இ முகமது அமைப்பைச் சேர்ந்த 2 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளனர்.
காஷ்மீரில் இந்த வாரம் மட்டும் 8 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். குடியரசு தினத்தையொட்டி தலைநகர் டெல்லியில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தக்கூடும் என்று ராணுவத்தினர் எச்சரித்துள்ளனர்.
இந்நிலையில் தான் காஷ்மீரில் 2 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.