இரட்டை இலை சின்னம்.. அதிமுக சார்பில் உச்சநீதிமன்றத்தில் திடீர் கேவியட் மனு.. எல்லாம் தற்காப்புதான்
டெல்லி: இரட்டை இலை சின்னம் தொடர்பான வழக்குகளில் தங்கள் கருத்தை கேட்க வேண்டும் என்று அதிமுக சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
மதுசூதனன் அணிக்கு இரட்டை இலையை ஒதுக்கி தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டுள்ள நிலையில், இதை எதிர்த்து சென்னை ஹைகோர்ட் அல்லது உச்சநீதிமன்றத்தில் தினகரன் அணியினர் மனு தாக்கல் செய்ய வாய்ப்புள்ளதாக தெரிகிறது.

இந்த நிலையில்தான் ஓபிஎஸ்-இபிஎஸ் அணிகள் சார்பாக உச்சநீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. தங்களிடம் கேட்காமல் இரட்டை இலை சின்னம் தொடர்பான எந்த வழக்கிலும் புது உத்தரவு பிறப்பிக்க கூடாது என்று கேவியட் மனுவில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
தினகரன் தரப்பு முதலில் டெல்லி ஹைகோர்ட்டில் மேல்முறையீடு செய்யலாமா என யோசித்து வந்ததாகவும், இப்போது, சென்னை ஹைகோர்ட் அல்லது, உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யலாமா என்பது குறித்து ஆலோசித்து வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.












Click it and Unblock the Notifications