இரட்டை இலைக்கு லஞ்சம்.. தினகரனுடன் சிக்கிய மேலும் ஒரு இடைத்தரகர் இன்று கைது?
இரட்டை இலை சின்னத்தைப் பெற லஞ்சம் கொடுக்கப்பட்ட வழக்கில் டிடிவி தினகரன் நள்ளிரவு கைது செய்யப்பட்டார். அவருடன் தொடர்புடைய ஷா பைசல் என்பவர் இன்று கைது செய்யப்படலாம் என்று டெல்லி வட்டாரங்கள் தெரிவிக்கின்
டெல்லி: இரட்டை இலைச் சின்னத்தை பெற லஞ்சம் கொடுத்த புகாரில் டிடிவி தினகரனை டெல்லி போலீசார் நள்ளிரவில் கைது செய்தனர். நான்கு நாட்கள் தொடர் விசாரணைக்குப் பிறகு டெல்லி போலீசார், நள்ளிரவில் டிடிவி தினகரனையும் அவரது நண்பர் மல்லிகார்ஜூனாவையும் கைது செய்துள்ளனர்.
அதிமுகவின் இரு அணிகளும் இரட்டை இலைச் சின்னத்துக்கு போட்டி போட்டதால் தேர்தல் ஆணையம் இரட்டை இலையை முடக்கியது. இதுதொடர்பான வழக்கு தேர்தல் ஆணையத்தில் நடைபெற்று வந்தது.
இந்நிலையில் இரட்டை இலை சின்னத்தை பெற தேர்தல் ஆணையத்திற்கு லஞ்சம் கொடுக்க பெங்களூரைச் சேர்ந்த சுகேஷ் சந்திரா என்ற இடைத்தரகர் மூலம் முயன்றதாக டிடிவி தினகரன் மீது டெல்லி போலீஸ் வழக்குப்பதிவு செய்தது.

புகார்
இரட்டை இலைச் சின்னத்தை பெற்றுத் தருமாறு கூறி ஒரு கோடியே 30 லட்சம் ரூபாய் லஞ்சமாக சுகேஷிடம் தினகரன் கொடுத்ததாகக் கூறப்படுகிறது. இதனையடுத்து, தெற்கு டெல்லியில் உள்ள ஒரு ஹோட்டலில் தங்கியிருந்த சுகேஷ் சந்திராவிடம் இருந்து ஒரு கோடியே 30 லட்சம் ரூபாய் பணத்தை கடந்த 17ஆம் தேதி டெல்லி போலீசார் பறிமுதல் செய்தனர். இதில் இருந்து தினகரனுக்கு பிரச்சனை உச்சமடைந்தது.

36 மணி நேர விசாரணை
இதனைத் தொடர்ந்து டிடிவி தினகரன், அவரது நண்பர் மல்லிகார்ஜுனா மற்றும் அவரது உதவியாளர் ஜனார்த்தன் ஆகியோரிடம் டெல்லிப் போலீசார் தொடர்ந்து 4 நாட்கள் விசாரணை நடத்தினார்கள். சுமார் தினகரனிடம் 36 மணி நேரம் விசாரணை நடத்திய பின்னர் நள்ளிரவு கைது செய்யப்பட்டார்.

ரகசியம் அம்பலம்
இந்த விசாரணையின் போது பல்வேறு ரகசிய தகவல்களும், பணப்பரிமாற்ற விவரங்களும் வெளியானதாக டெல்லி போலீஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்த விசாரணையின் போது இன்னொரு இடைத்தரகரான ஷா பைசல் என்பவர் பற்றிய தகவலும் கிடைத்துள்ளன. ஷா பைசலை சுகேஷ் சந்திரா அடையாளம் காட்டியதாகக் கூறப்படுகிறது.

ஷா பைசல் ஆஜர்
இதனையடுத்து ஷா பைசல் இன்று நேரில் ஆஜராக வேண்டும் என்று டெல்லி போலீசார் உத்தரவிட்டுள்ளனர். அவரிடம் விசாரணை நடத்தும் மேலும் பல திடுக்கிடும் தகவல்கள் கிடைக்கலாம் என்று கூறப்படுகிறது. அதே நேரம் அவர் கைது செய்யப்படுவதற்கான வாய்ப்புகளும் இருப்பதாக தெரிகிறது.
-
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை!












Click it and Unblock the Notifications