ஐஎன்எஸ் சிந்து ரத்னா கப்பல் விபத்தில் மாயமான 2 அதிகாரிகளும் மரணம்
மும்பை: இந்தியக் கடற்படையின் ஐஎன்எஸ் சிந்துரத்னா நீர்மூழ்கிக் கப்பல் விபத்துக்குள்ளானதைத் தொடர்ந்து காணாமல் போன இரண்டு அதிகாரிகளும் உயிரிழந்து விட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கடற்படை நீர்மூழ்கிக் கப்பலான ஐஎன்எஸ் சிந்துரத்னா, புதன்கிழமையன்று கடலுக்கடியில் இருந்தபோது திடீரென ஒரு பகுதியில் புகை கிளம்பியது. அப்போது கப்பலில் 94 பேர் இருந்தனர்.
இதையடுத்து உடனடியாக மீட்புப் படையினர் விரைந்தனர். கப்பலில் இருந்த அனைவரும் பத்திரமாக மீட்கப்பட்டனர். அதில் 7 பேர் நினைவிழந்த நிலையில் மீட்கப்பட்டு கடற்படை மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.

ஆனால் லெப்டினன்ட் கமாண்டர் அபிஷ் முவால், லெப்டினன்ட் மனோரஞ்சன் குமார் பலி ஆகிய இரண்டு அதிகாரிகளை மட்டும் காணவில்லை. அவர்கள் கப்பலுக்குள் சிக்கியிருக்கலாம் குறிப்பாக புகை மூண்ட பகுதிக்குள் சிக்கியிருக்கலாம் என்று அஞ்சப்பட்டது.
அவர்களைத் தேடும் பணி நடந்து வந்தது. இந்த நிலையில் தற்போது இருவரும் உயிரிழந்து விட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன. அவர்களது உடல்களை மீட்புப் படையினர் கண்டுபிடித்துள்ளதாகவும் செய்திகள் கூறுகின்றன.

சிந்துரத்னா கப்பலை மீட்டு கொண்டு வந்த பின்னர் இரு அதிகாரிகளும் இருந்த பெட்டியை உடைத்துத் திறந்து பார்த்தபோது இருவரும் உயிரிழந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டதாக அத்தகவல்கள் கூறுகின்றன.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications