கொல்கத்தாவில் போலீஸ் கமிஷனர் வீடு அருகே துப்பாக்கிச் சூடு- 2 பேர் பலி
Subscribe to Oneindia Tamil
கொல்கத்தா: மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் இன்று காலை நடந்த துப்பாக்கிச் சூட்டில் 2 பேர் பலியாகினர்.
கொல்கத்தா நகரில் போலீஸ் கமிஷனர் வீடு அருகே நர்சரி பள்ளி ஒன்று உள்ளது. இன்று அதிகாலை அந்த பள்ளி வளாகத்துக்குள் 10 பேர் கொண்ட கும்பல் நுழைந்து தகராறில் ஈடுபட்டிருக்கிறது.
இதைத் தொடர்ந்து நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில் 2 பேர் பலியாகி உள்ளனர். ஒருவர் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இச்சம்பவம் தொடர்பாக நர்சரி பள்ளி தலைமை ஆசிரியை உட்பட 4 பேரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். நர்சரி பள்ளி இடம் தொடர்பான தகராறில்தான் இந்த துப்பாக்கிச் சூடு நிகழ்ந்திருப்பதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications