மே. வங்கத்தில் வாக்குப்பதிவு நடக்கும் இடத்தில் துப்பாக்கிச்சூடு.. 2 பாதுகாப்பு படை வீரர்கள் காயம்!
கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் பகவான்பூர் என்ற இடத்தில் வாக்குப்பதிவு தொடங்குவதற்கு முன்பாக மர்ம நபர்கள் துப்பாக்கியால் சுட்டதில் 2 பாதுகாப்பு படை வீரர்கள் காயம் அடைந்தனர்.
அசாமில் மொத்தம் உள்ள 126 தொகுதிகளுக்கு 3 கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது. மேற்கு வங்கத்தில் 294 தொகுதிகளுக்கு 8 கட்டங்களாக சட்டசபை தேர்தல் நடைபெறுகிறது.

இந்த நிலையில் அசாம் மற்றும் மேற்கு வங்கத்தில் 77 தொகுதிகளில் முதற்கட்ட வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கியது. அசாமில் 47 தொகுதிகளுக்கு முதற்கட்ட வாக்குப்பதிவு தொடங்கியுள்ளது. மேற்கு வங்கத்தில் 30 தொகுதிகளில் முதற்கட்ட வாக்குப்பதிவு தொடங்கியுள்ளது. மேற்கு வங்கத்தின் ஜர்கிராம், மேற்கு திட்னாபூர் உள்ளிட்ட பல மாவட்டங்களில் பொதுமக்கள் காலையிலேயே வந்து வரிசையாக ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர்.
இந்த நிலையில் மேற்கு வங்கத்தில் பகவான்பூர் தொகுதியில் சத்சமல் நகரில் வாக்குப்பதிவு காலை தொடங்க இருந்தது. அங்கு வந்த 2 பேர் வாக்களிப்பதற்காக வரிசையில் நின்ற வாக்காளர்களை அச்சறுத்தியதாக கூறப்படுகிறது. அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த படை வீரர்கள் அவர்களை தடுத்து நிறுத்தினர். அப்போது அந்த நபர்கள் திடீரென சுட்டதில் 2 பாதுகாப்பு படை வீரர்கள் காயம் அடைந்தனர்.
உடனடியாக அவர்கள் மீட்டு சிகிச்சைக்காக அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். திரிணாமுல் கட்சியினருடன் சேர்ந்து மர்ம நபர்கள் வாக்காளர்களை அச்சுறுத்தியாக பாஜக பகீர் புகார் தெரிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications