For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

காளான் சேகரிக்க காட்டிற்குள் சென்ற 2 பெண்கள் யானை தாக்கி பலி - ஒருவர் கவலைக்கிடம்

Google Oneindia Tamil News

கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் காளான் சேகரிக்க காட்டிற்குள் சென்ற இரண்டு பெண்கள் யானை தாக்கி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மேற்கு வங்காள மாநிலத்தின் பன்குரா மாவட்டம் மட்லா கிராமம் வனப்பகுதியை ஒட்டி அமைந்துள்ளது. இன்று காலை 5.30 மணியளவில் இந்தக் கிராமத்தைச் சேர்ந்த அஷோகா(45), ரபிபல தாஸ்(55) மற்றும் மீரா (55) என்ற மூன்று பெண்கள் காளான் சேகரிப்பதற்காக காட்டிற்குள் சென்றுள்ளனர்.

Two women killed, one injured in elephant attack

அப்போது எதிர்பாராதவிதமாக மூவரும் மூன்று காட்டுயானைகளிடம் சிக்கினர். அதில், காட்டுயானை தாக்கியதில் அஷோகாவும், ரபிபல தாஸும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

பலத்த காயங்களுடன் மீட்கப்பட்ட மீரா, மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகிறார்.

English summary
Two women were killed and another woman was injured in elephant attack in a forest area of Bankura district in West Bengal today.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X