திருவனந்தபுரம் ஏர்போர்ட்டில் தரையிறங்குகையில் ஏர் இந்தியா விமான டயர் வெடிப்பு: பயணிகள் பீதி
Subscribe to Oneindia Tamil
திருவனந்தபுரம்: மாலியில் இருந்து திருவனந்தபுரம் வந்த ஏர் இந்தியா நிறுவன விமானம் தரையிறங்குகையில் அதன் டயர் வெடித்ததால் பயணிகள் பீதி அடைந்தனர்.
ஏர் இந்தியா விமானம் ஏஐ 264 மாலியிருந்து 152 பயணிகளுடன் கேரள மாநிலம் திருவனந்தபுரத்திற்கு சனிக்கிழமை வந்தது. திருவனந்தபுரம் விமான நிலையத்தில் தரையிறங்கும்போது விமானத்தின் வலது பக்கம் உள்ள டயர் திடீர் என்று வெடித்தது.

இந்த சம்பவத்தில் பயணிகள் யாரும் காயம் அடையவில்லை.
இது குறித்து விமான நிலைய உயர் அதிகாரி ஷிபு ராபர்ட் கூறுகையில்,
டயர் வெடித்ததால் விமானத்திற்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. அதில் இருந்த 152 பயணிகளும் பாதுகாப்பாக இருந்தனர். தரையிறங்கும்போது ஏற்பட்ட பிரச்சனையால் அல்ல ஏர் பிரஷரால் டயர் வெடித்திருக்கலாம் என்றார்.












Click it and Unblock the Notifications