மாலத்தீவு-சென்னை ஏர் இந்தியா விமான டயரில் திடீர் தீ
திருவனந்தபுரம்: திருவனந்தபுரம் விமான நிலையத்துக்கு வந்திறங்கிய ஏர் இந்தியா விமானத்தின் டயர்களில் தீப்பொறி கிளம்பியதால் பதற்றம் ஏற்பட்டது. அதிருஷ்டவசமாக விமானம் விபத்திலிருந்து தப்பியது.

மாலத்தீவில் இருந்து திருவனந்தபுரம், பெங்களூர் வழியாக சென்னை செல்லும் ஏர் இந்தியா விமானம் திருவனந்தபுரம் விமான நிலையத்துக்கு இன்று மதியம் 12.30 மணிக்கு வந்தது. ஏ-320 ரகத்தை சேர்ந்த இந்த விமானத்தில், மொத்தம் 150 பேர் இருந்தனர். திருவனந்தபுரம் சர்வதேச விமான நிலையத்தின் ஓடுபாதையில் அந்த விமானம் தரையிறங்கி ஓடத்தொடங்கியபோது அதன் பின் சக்கரங்களில் திடீரென தீப்பொறி கிளம்பியது.
இருப்பினும் விமானத்தில் நெருப்பு பரவாமல் அதிருஷ்டவசமாக விமானம் தப்பியது. விமானம் நிறுத்தப்பட்டதும், இன்ஜினியர்கள் விரைந்து சென்று பழுதை சரி பார்த்தனர். இதனால் விமானத்தின் புறப்பாட்டில் தாமதம் ஏற்பட்டது. பெங்களூர், சென்னை செல்லவிருந்த விமான பயணிகள் இதனால் அவதிப்பட்டனர்.












Click it and Unblock the Notifications