தென்சீனா கடற்பரப்பில் அமெரிக்கா- இந்தியா கூட்டு ரோந்து?
டெல்லி: சர்ச்சைக்குரிய தென் சீனா கடற்பரப்பில் அமெரிக்காவும் இந்தியாவும் கூட்டு ரோந்து மேற்கொள்வது தொடர்பான பேச்சுவார்த்தைகளை நடத்தி வருகிறது. இப்பேச்சுவார்த்தையால் சீனா கடும் ஆத்திரமடைந்துள்ளது.
தென் சீனா கடற்பரப்பு முழுவதையும் தமக்கு சொந்தம் கொண்டாடி வருகிறது சீனா. ஆனால் வியட்நாம், புருனே உள்ளிட்ட நாடுகளும் தென் சீனா கடற்பரப்புக்கு உரிமை கொண்டாடி வருகின்றன.

இதனால் தென் சீனா கடற்பரப்பில் 2 செயற்கையான தீவுகளை உருவாக்கி அங்கே ராணுவத்தை நிறுத்தி வைத்துள்ளது சீனா. அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் சீனாவின் இந்நடவடிக்கையை கடுமையாக எதிர்த்து வருகின்றன.
இந்தியாவின் தென் சீனா கடற்பரப்பு முழுவதும் சீனாவுக்கே சொந்தமானது என்ற நிலைப்பாட்டை கடுமையாக எதிர்க்கிறது. அமெரிக்காவின் போர்க்கப்பல்கள் அப்பகுதிக்கு சென்று ரோந்து பணியில் அவ்வப்போது ஈடுபடடுகின்றன.
இந்நிலையில் ஆசியாவில் உள்ள நட்பு நாடுகளுடன் இணைந்து தென்சீனா கடற்பரப்பில் கூட்டு ரோந்து பணியில் ஈடுபட அமெரிக்கா விரும்புகிறது. இந்திய பெருங்கடலில் அமெரிக்கா, இந்தியா, ஜப்பான் நாடுகள் இணைந்து கூட்டு கடற்படை பயிற்சியை கடந்த ஆண்டு நடத்தியிருந்தது.
இதேபோல் தென்சீனா கடற்பரப்பிலும் கூட்டு ரோந்து நடவடிக்கை மேற்கொள்ள அமெரிக்கா முயற்சித்து வருகிறது. இதன் ஒரு கட்டமாக இந்தியாவுடன் பேச்சுவார்த்தைகளை அமெரிக்கா நடத்தி வருகிறது.
ஆனால் இந்திய அதிகாரிகளோ, ஐநாவின் கீழான சர்வதேச ராணுவத்தில் மட்டுமே இணைந்து செயல்படுவது என்ற நிலைப்பாட்டில் எந்த ஒரு மாற்றமும் இல்லை எனக் கூறி வருகின்றனர். இருப்பினும் இந்தியாவை ஒப்புக் கொள்ள வைப்பதற்கான முயற்சிகளை தீவிரமாக அமெரிக்கா மேற்கொண்டு வருகிறது.
அமெரிக்காவின் இந்நடவடிக்கை சீனாவை கடும் ஆத்திரமடைய வைத்துள்ளதாக கூறப்படுகிறது.
-
தெறித்து ஓடும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள்! பாதாளத்திற்கே போகும் இந்திய பங்குச்சந்தைகள்.. 3 காரணங்கள் -
துரந்தர் இல்லை.. துரோகி.. இந்திய விமான படை வீரர் அதிரடி கைது! பாகிஸ்தானுக்காக உளவு பார்த்தது அம்பலம் -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி












Click it and Unblock the Notifications