பணியில் தூங்கிய உபேர் டிரைவர், டாக்சியை ஓட்டிய பயணி: வீடியோவை நீங்களே பாருங்க!

Subscribe to Oneindia Tamil

குருகிராம்: குருகிராமில் உபேர் டாக்சியை ஓட்டும்போதே டிரைவர் தூங்கியதால் பயணி வேறு வழியில்லாமல் வாகனத்தை ஓட்டியுள்ளார்.

குருகிராமில் உள்ள நிறுவனத்தில் பணியாற்றுபவர் இஷான் கில்(23). அவர் கடந்த 15ம் தேதி இரவு 12.36 மணிக்கு டெல்லியில் இருந்து குருகிராம்(குர்காவ்ன்) செல்ல உபேர் ஆப் மூலம் டாக்சியை புக் செய்தார்.

ஒரு மணிநேரம் தாமதமாக வந்த டிரைவர் தூங்கி வழிந்துள்ளார். இது குறித்து இஷான் ஃபேஸ்புக்கில் கூறியிருப்பதாவது,

டிரைவர் அஜய் ஒரு மணிநேரம் தாமதமாக வந்தார். அவர் தூங்கி வழிந்தார். நீங்கள் நல்லாத் தானே இருக்கிறீர்கள் என்று கேட்டதற்கு ஆம் என தலையாட்டினார்.

ஆரோபிந்தோ மார்க்கில் செல்கையில் செல்போனில் மெசேஜ் அனுப்புவதை நிறுத்திவிட்டு தலையை நிமிர்ந்து பார்த்தால் அஜய் காரை டிவைடர் மீது மோதவிருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தேன்.

உடனே காரே ஓரமாக நிறுத்துமாறு கூறினேன். இரவு 1.30 மணி ஆனதால் அவரால் வேறு டாக்சியை வரவழைக்க முடியவில்லை. அவரிடம் என் ஓட்டுநர் உரிமத்தை காண்பித்து நான் வாகனத்தை ஓட்டுகிறேன் என்று கூறி ஓட்டினேன். டிரைவர் பயணி சீட்டில் தூங்கிவிட்டார். நான் சேர வேண்டிய இடத்தை அடைந்ததும் பணத்தை அவர் மடியில் போட்டுவிட்டு அவரை பார்த்துக் கொள்ளுமாறு அங்கிருந்த பாதுகாவலரிடம் தெரிவித்தேன் என்று கூறியுள்ளார்.

இது குறித்து இஷான் வெளியிட்டுள்ள வீடியோவும் இணையதளத்தில் பலரை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+