"இவ்வளவு வேகம் வேண்டாம்.." கதறிய நண்பர்.. அடுத்த நொடி 140 கிமீ வேகத்தில் கவிழ்ந்த கார்.. 4 பேர் பலி
ஜெய்ப்பூர்: அதிகாலை நேரம் காரை 140 கிமீ வேகத்தில் காரை இயக்கிய இளைஞர்கள் விபத்தில் சிக்கியுள்ளனர். இதில் 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். உடன் பயணித்த இளைஞர் ஒருவர், இவ்வளவு வேகம் வேண்டாம் எனப் படித்துப் படித்துச் சொல்லியும் கேட்காமல் காரை வேகமாக இயக்கியதே இந்தக் கொடூர விபத்துக்குக் காரணமாக இருக்கிறது.
இந்தக் காலத்தில் இளைஞர்கள் பலரும் பொறுப்பில்லாத வகையில் அதிவேகமாகக் காரை இயக்குகிறார்கள். வேகமாகக் காரை இயக்கும்போது விபத்து ஏற்படவும் இதனால் உயிரிழப்புகள் ஏற்படவும் வாய்ப்புகள் ரொம்பவே அதிகம். இதன் காரணமாகவே மிதமான வேகத்தில் வாகனங்களை இயக்கும்படி போக்குவரத்து அதிகாரிகள் தொடர்ந்து அறிவுறுத்தி வருகிறார்கள்.

அதிவேகம்
இருப்பினும், அதைக் கேட்காமல் சில இளைஞர்கள் அதிவேகமாகத் தங்கள் வாகனங்களை இயக்குகிறார்கள். அதுபோன்ற நேரங்களில் மோசமான விபத்துகள் ஏற்படுகிறது. அப்படியொரு மோசமான சம்பவம் தான் ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் நடந்துள்ளது. அங்கு அதிகாலை நேரத்தில் அதிவேகமாக வந்த கார் மிக மோசமான விபத்தில் சிக்கியது. இந்த விபத்தில் 4 பேர் உயிரிழந்தனர். இருவர் படுகாயமடைந்த நிலையில், அவர்கள் தீவிரச் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
என்ன நடந்தது
கடந்த 17ம் தேதி இந்த கோரமான விபத்து நடந்த நிலையில், இது தொடர்பாகச் சில கூடுதல் தகவல்கள் வெளியாகியுள்ளது. அதாவது இளைஞர்கள் சிலர் அதிவேகமாகக் காரை இயக்கியுள்ளனர். சவினா பகுதியில் கார் 140 கி.மீ. வேகத்தில் சென்றுள்ளது.. அப்போது தான் எதிர்பாராத விதமாக கார் தலைகுப்புற கவிழ்ந்து, விபத்து நடந்துள்ளது.
கார் விபத்தில் சிக்குவதற்கு முன்பு எடுக்கப்பட்ட வீடியோ ஒன்றும் இப்போது இணையத்தில் வெளியாகியுள்ளது. அதில் ஓட்டுநர் ஷெர் முகமது, அகமதாபாத் பைபாஸில் காரை 100-120 கி.மீ. வேகத்தில் முதலில் இயக்குகிறார். பிறகு சில நிமிடங்களில் காரை 140 கி.மீ. வேகத்தில் ஓட்டுகிறார். கையில் சிகரெட், சத்தமான மியூசிக் எனக் கொஞ்சம் கூட பொறுப்பே இல்லாமல் காரை ஓட்டியுள்ளனர்.
எவ்வளவு சொல்லியும் கேட்கல
வீடியோ தொடங்கி 1.10 நிமிடங்கள் வரை எந்தவொரு பிரச்சனையும் இல்லை. ஆனால், அடுத்து சட்டென கார் எதிர்பாராத விதமாக விபத்தில் சிக்கியுள்ளது. அந்த வீடியோவில் காரின் பின் இருக்கையில் இருந்த நபர் ஒருவர், இவ்வளவு வேகத்தில் செல்ல வேண்டாம் என ஓட்டுநரிடம் பலமுறை சொல்வதும் கூட தெளிவாகக் கேட்கிறது. இருப்பினும், அதையும் கேட்காமல் காரை வேகமாக ஓட்டியுள்ளனர். இந்த அதிவேகமே நண்பரின் பிறந்தநாள் கொண்டாட்டம் மரண ஓலமாக மாற பிரதானக் காரணமாக இருந்துள்ளது.
உயிரிழப்புகள்
அதிகாலை 3 மணியளவில் இந்தத் துயர விபத்து நிகழ்ந்தது. காரில் சிக்கியிருந்தவர்கள் சுமார் பத்து நிமிடங்கள் வரை உதவி கோரி அலறியுள்ளனர். இருப்பினும், விபத்து நடந்தபோது அங்கு அருகே யாருமில்லை. மக்கள் சம்பவ இடத்திற்கு வருவதற்குள், நான்கு பேர் உயிரிழந்திருந்தனர், இருவர் வலியால் துடித்துக்கொண்டிருந்தனர். அவர்களை மீட்டு அருகே இருந்த மருத்துவமனைக்கு அக்கம் பக்கத்தினர் அனுப்பி வைத்தனர்.
அவர்களும் கூட இப்போது உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் இப்போது விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த வீடியோ இணையத்தில் வேகமாகப் பரவி வரும் நிலையில், அதிவேகம் எந்தளவுக்கு ஆபத்தாக முடியும் என்பதைக் காட்டுவதாகவே இந்த வீடியோ இருக்கிறது.
-
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
தங்க வேட்டை.. உலக நாடுகளின் 'பக்கா' பிளான்.. மத்திய வங்கிகள் முண்டியடிப்பதன் பின்னணி என்ன? -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000!












Click it and Unblock the Notifications