ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் நிரந்தர உறுப்பு நாடாக முயலும் இந்தியாவுக்கு நல்ல சேதி
டெல்லி: ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் நிரந்தர உறுப்பு நாடு அங்கீகாரம் பெற விழையும் இந்தியாவின் முயற்சிக்கு முன்னேற்றம் கிடைத்துள்ளது. சீனா, பாகிஸ்தான், ரஷ்யாவின் எதிர்ப்பையும் மீறி, பாதுகாப்பு கவுன்சிலரை மறுசீரமைப்பது குறித்து ஆலோசிக்க ஐ.நா. ஒப்புதல் வழங்கியுள்ளது. இதை இந்தியா வரவேற்றுள்ளது.
ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலை மறுசீரமைத்து, பாதுகாப்பு கவுன்சிலில் நிரந்தர உறுப்பினர்களாக உள்ள நாடுகளின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் என்று, இந்தியா தரப்பில் நீண்ட காலமாக வலியுறுத்தப்பட்டு வருகிறது. இப்படி செய்தால், நிரந்தர உறுப்பு நாடுகளின் பட்டியலில் இடம்பெற இந்தியாவுக்கு வாய்ப்பு பிரகாசமாக உள்ளது.

ஆனால், நிரந்தர உறுப்பு நாடுகளின் பட்டியலில் உள்ள அமெரிக்கா, சீனா மற்றும் ரஷ்யா ஆகிய நாடுகள், இந்தியாவின் முயற்சிக்கு தொடர்ந்து முட்டுக்கட்டை போட்டு வந்தன. மறுசீரமைப்பு தொடர்பாக பேச்சு நடத்துவதற்கு கூட, இந்த நாடுகள் சம்மதிக்கவில்லை.
ஆனால், இந்தியாவின் நீண்டகால முயற்சிக்கு, தற்போது, குறிப்பிடத்தக்க வகையிலான முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. பொதுச்சபை கூட்டத்தில், பாதுகாப்பு கவுன்சிலை மறுசீரமைப்பது குறித்து பேச்சு நடத்துவதற்கு, ஐ.நா., தரப்பில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான வரைவு அறிக்கையை (டிராப்ட்), ஐ.நா. பொதுச்சபை நேற்று ஏற்றுக்கொண்டது.
ஐ.நா.வுக்கான இந்திய தூதர் அசோக் முகர்ஜி ஐ.நா. பொது கவுன்சிலில் இதுகுறித்து பேசுகையில், "ஐ.நா. நடவடிக்கை ஒரு புதிய பாதையை உருவாக்கியுள்ளது" என்று பாராட்டினார்.
சீனாவோ, இது சரியில்லை என்றும், வெளிப்படைத்தன்மை இல்லாமல் இருப்பதாகவும் குற்றம்சாட்டியுள்ளது. ஐ.நா.வுக்கான முன்னாள் இந்திய தூதர் ஹர்தீப் சிங் புரி கூறுகையில், "இந்தியாவின் சிறப்பான ராஜதந்திர காய் நகர்த்தலுக்கு கிடைத்த வெற்றி இது" என்று தெரிவித்தார்.
-
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர்












Click it and Unblock the Notifications