ரூபாய் நோட்டு அவலம்.. தேர்வு கட்டணம் செலுத்த முடியாமல் கல்லூரி மாணவர் தூக்குப் போட்டுத் தற்கொலை
ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவிக்கப்பட்டுள்ளதால் தேர்வுக் கட்டணம் செலுத்த வங்கியில் பணம் எடுக்க முடியாமல் உத்தரப் பிரதேச மாநில கல்லூரி மாணவர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட அவலம் நடந்துள்ளது
லக்னோ: உத்தரப்பிரதேச மாநிலத்தில் 18-வயதுடைய கல்லூரி மாணவர் ஒருவர் தேர்வுக்கட்டணம் செலுத்த வங்கியில் பணம் எடுக்க முடியாமல் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட அவலம் நடந்துள்ளது.
உத்தரப் பிரதேச மாநிலம் பண்டா மாவட்டத்தில் உள்ள மாவை புசுருக் கிராமத்தைச் சேர்ந்தவர் சுரேஷ். இவர் அங்குள்ள கல்லூரியில் 2-ம் ஆண்டு பிஎஸ்சி படித்து வந்துள்ளார். இந்நிலையில், அவரை தேர்வுக்கட்டணம் செலுத்துமாறு கல்லூரி நிர்வாகத்தினர் அறிவுறுத்தியுள்ளனர்.

இதனால், மாணவர் சுரேஷ் கடந்த சில தினங்களாக வங்கியில் பணம் எடுக்க முயற்சித்து வந்துள்ளார். ஆனால் அவரது முயற்சிகளுக்கு எந்தப் பலனும் கிடைக்கவில்லை. எனவே, தேர்வுக் கட்டணம் செலுத்த பணம் எடுக்க முடியாமல் தவித்து வந்துள்ளார்.
இந்நிலையில், செவ்வாய்க்கிழமை வங்கியில் இருந்து பணம் எடுக்க முடியாமல் மீண்டும் ஏமாற்றத்துடன் திரும்பிய சுரேஷ், வீட்டில் மின் விசிறியில் அவரது அம்மாவினுடைய சேலையினைக் கட்டித் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
இதுகுறித்த தகவலின்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற பாண்டா மாவட்ட போலீசார் வழக்குப் பதிவு செய்து உரிய விசாரணை நடத்தி வருகின்றனர்.
இச்சம்பவம் குறித்து சுரேஷின் உறவினர்கள் கூறியதாவது: கல்லூரியில் தேர்வுக் கட்டணம் செலுத்த புதன்கிழமை (இன்று) கடைசி நாளாகும். எனவே தேர்வுக் கட்டணத்துக்கான பணத்தை வங்கியில் இருந்து எடுக்க முடியாத விரக்தியில் சுரேஷ் தலை செய்து கொண்டதாக தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவத்தினால் ஆத்திரம் அடைந்த அந்தக் கிராம மக்கள் வங்கி மீது கல்விசித் தாக்குதல் நடத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மருத்துவ சிகிச்சைக்கு பணம் எடுக்க முடியாமல் போனதால் திங்கள்கிழமை அன்று உத்தரப் பிரதேச மாநில தின்ட்வாரி காவல் நிலைய எல்கைக்குட்டபட்ட ஒரு குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.
-
சிவி சண்முகம் சர்ச்சை பேச்சு.. இன்ஸ்டா போஸ்டில் நயன்தாரா பதிலடி.. இப்படி சொல்லிட்டாரே! குவியும் கமெண்ட்ஸ்! -
மொத்த பவரையும் காட்டிய இந்தியா.. கச்சா எண்ணெயுடன் குஜராத் வந்தது இந்திய டேங்கர் கப்பல்! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஷாக்! அதிரடியாக தூக்கப்பட்ட ரேஷன் கார்டுகள்! 41.41 லட்சம் குளோஸ்! -
அன்று 10 ஆயிரம் போட்டிருந்தால் இன்று ஒரு கோடி.. ஆச்சரியமாக வளர்ந்த பிரபல நிறுவனம் -
திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் கண்ட காட்சி.. ஆடிப்போன பொதுமக்கள்.. அதிர வைத்த ஊழியர்கள் -
கடன் சுமை.. வீட்டை ஜப்தி செய்த அதிகாரிகள்.. தெருவோரம் தூங்கிய சீரியல் நடிகை.. நெகிழ வைத்த மாற்றம்! -
29 தொகுதிகள்.. காங்கிரஸை விட 1 கூடுதலாக.. நாளை மறுநாள் அதிமுக - பாஜக ஒப்பந்தம் கையெழுத்து? -
”90 சீட், 2.5 வருடம் முதல்வர்” பேரம் பேசுனாங்க.. விஜய் சொன்ன ஒரே வார்த்தை! போட்டு உடைத்த ஆதவ் அர்ஜுனா -
சீனாவுக்குச் சென்ற ரஷ்ய கப்பல்கள் திடீரென இந்தியா நோக்கி யூ-டர்ன்! Oil வருது -
சிறகடிக்க ஆசை: மீனா கண்ட காட்சி.. மீண்டும் ஜெயித்த ரோகிணி.. விஜயா வீட்டில் கொண்டாட்டம்! கடுப்பில் மனோஜ் -
ரெடியாகும் முக்கோண சாலை.. கோவை - திருச்சி - கரூர்.. தமிழ்நாட்டின் மிக முக்கிய பசுமை வழிச்சாலை! -
இந்தியாவில் இறங்கிய 7 வெளிநாட்டவர்.. கைமாறிய ஆயுதங்கள்.. சத்தமே இல்லாமல் தட்டி தூக்கிய என்ஏஐ!












Click it and Unblock the Notifications