லிவிங் உறவை அரசுக்கு தெரிவிக்காவிட்டால் சிறை! உத்தரகாண்டில் அமலானது பொது சிவில் சட்டம்
டேராடூன்: அரசுக்கு தெரியாமல் லிவிங் உறவு முறையில் வாழ்பவர்களுக்கு சிறை தண்டனை விதிக்க வழி வகை செய்யும், பொது சிவில் சட்டம் இன்று முதல் உத்தரகாண்ட் மாநிலத்தில் அமலாகிறது. இதன் மூலம இந்தியாவில் பொது சிவில் சட்டம் அமல்படுத்தப்படும் முதல் மாநிலமாக உத்தரகாண்ட் இருக்கிறது.
கடந்த 2022ம் ஆண்டு அம்மாநில சட்டமன்ற தேர்தல் பிரசாரத்தில், பாஜக சார்பில் முதல்வர் வேட்பாளராக நிற்க வைக்கப்பட்ட புஷ்கர் சிங் தாமி, நான் ஆட்சிக்கு வந்தால் பொது சிவில் சட்டத்தை அமல்படுத்துவேன் என்று கூறியிருந்தார். தேர்தலில் மக்கள் அவரை முதல்வராக வெற்றி பெற செய்தனர். இதனையடுத்து கடந்த ஆண்டு பொது சிவில் சட்டம் குறித்த தீர்மானத்தை அவர் சட்டமன்றத்தில் கொண்டு வந்தார். அது குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டது. இதனையடுத்து இன்று முதல் சட்டம் அமலாகிறது.

இந்த சட்டத்தின்படி, இனி மாநிலம் முழுவதும் உள்ள அனைத்து மதம், சாதி, இன குழுக்களுக்கும் திருமணம் உள்ளிட்ட விஷயங்களில் ஒரே சட்டம் பொருந்தும். இதில் பழங்குடியின மக்களுக்கு மட்டும் விதி விலக்கு கொடுக்கப்பட்டிருக்கிறது. இந்த சட்டத்திற்கு எதிர்க்கட்சிகளின் பலமான எதிர்ப்புகள் இருந்தபோதும், சட்டமாக இன்று முதல் இது அமலாகிறது.
இந்த சட்டத்தின் படி இனி உத்தரகாண்ட்டில் லிவிங் உறவில் இருப்பவர்கள், அது குறித்து அரசுக்கு தெரியப்படுத்த வேண்டும். ஒருவேளை, அவர்கள் தங்கள் உறவை 1 மாதமாகியும் தெரிவிக்கவில்லை எனில், அவர்கள் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்கப்படும். அபராதமும், சிறை தண்டனையும் இதற்காக வழங்கப்படும். லிவிங் உறவில் இருப்பவர்கள் தங்கள் உறவை முடித்துக்கொள்ள விரும்பினால், அதை வெளிப்படையாக அறிவிக்க வேண்டும்.
திருமணங்களை பொறுத்தவரை, அது ஒரு ஆணுக்கும் பெண்ணுக்குமானதாக மட்டுமே இருக்க முடியும். இப்படி அறிவிப்பதன் மூலம் மாற்று பாலினத்தவர்களுக்கான திருமணம் அங்கீகரிக்கப்படாது என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது. அதேபோல திருமணத்தை கட்டாயமாக பதிவு செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டிருக்கிறது.
விவாகரத்தை பொறுத்தவரையில், கணவனோ, மனைவியோ வேறு மதம் மாறினால் அது விவாகரத்துக்கான காரணமாக ஏற்றுக்கொள்ளப்படும் என்றும் இந்த சட்டம் கூறுகிறது.
உத்தரகாண்ட்டில் இந்த சட்டத்தை முதன் முதலில் அறிமுகப்படுத்தியதற்கு பல காரணங்கள் சொல்லப்படுகின்றன. குறிப்பாக இங்கு, இந்துக்களின் எண்ணிக்கை அதிகம். அதேபோல இஸ்லாமியர்களின் எண்ணிக்கை குறைவாக இருக்கிறது. நாடு முழுவதும் பொது சிவில் சட்டத்தை அமல்படுத்த பாஜக திட்டமிட்டு வருகிறது. இதற்கு முன்னோட்டமாக உத்தரகாண்டில் சட்டம் அமல்படுத்தப்பட்டிருப்பதாக அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.
-
இந்தியாவுக்கு ஆப்பு வைக்கும் ரஷ்யா.. கச்சா எண்ணெய் விலையில் இனி சலுகை இல்லை? நேரம் பார்த்து அடிக்கும் புதின் -
Next CM: தமிழகத்தில் ஆட்சியை பிடிப்பது யார் தெரியுமா? சித்தர் கணிப்பை பாருங்க! அப்போ விஜய்? -
அல்வா மாதிரி அள்ளிகிட்டு போன அண்ணியார்.. ஏக கடுப்பில் மாஜி மக்கள் நலக் கூட்டணி! திமுகவுக்கு சிக்கல்? -
எடப்பாடி கோட்டையில் திமுகவுக்கு ஷாக்! அதிமுகவுக்கு தாவிய முன்னாள் எம்.எல்.ஏ! -
வசமாக சிக்கும் டிரம்ப்.. ஈரான் கப்பல் தாக்கப்பட்ட விஷயத்தில் பெரிய மிஸ்டேக்! ரவுண்டு கட்டும் சட்டம் -
கூட்டணியில் சொதப்பிய ஆதவ் அர்ஜுனா.. கண் சிவந்த விஜய்.. தவெகவில் உச்சகட்ட மோதல் -
ட்விஸ்ட்! அதிமுக கூட்டணியில் தவெக? 40 சீட் தர எடப்பாடி தயார்! விஜய்க்கு வேற வழியே இல்லையா? -
விசிக முதல் தேமுதிக வரை.. திமுக கூட்டணியில் போர்க்கொடி உயர்த்திய 6 கட்சிகள்.. தொகுதி பங்கீட்டில் இழுபறி -
டிரம்ப்பை ஒன்றுகூடி அடிக்கும் வளைகுடா நாடுகள்.. அமெரிக்காவுக்கு பெரிய செக்! எதிர்பார்க்கவே இல்லை -
அமெரிக்க பாதுகாப்பில் பெரிய ஓட்டை! கச்சிதமாக வேலையை முடித்த ஈரான்! சீனா சொன்ன மேட்டர்! -
உலகப்போர் 3.. கிளைமேக்ஸை நோக்கிச் செல்கிறது ஈரான் போர்.. அமெரிக்கா கையில் எடுக்கும் அணுகுண்டு! -
எக்சிட் பிளான் இல்லை.. டிரம்பிற்கு 'நரகமாக' மாறும் ஈரான்.. அணு ஆயுதத்தை கையில் எடுக்கும் அமெரிக்கா!












Click it and Unblock the Notifications