மத்திய பட்ஜெட்: சேவை வரியை அறிமுகபடுத்தி, இறக்குமதி வரியை குறைத்தவர் யார் தெரியுமா?
சென்னை: மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி 2014-2015ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை இன்று தாக்கல் செய்தார்.
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் கடந்த திங்கட்கிழமை துவங்கி நடந்து வருகிறது. கடந்த செவ்வாய்க்கிழமை ரயில்வே பட்ஜெட்டை மத்திய ரயில்வே அமைச்சர் சதானந்த கவுடா தாக்கல் செய்தார். இதைத் தொடர்ந்து புதன்கிழமை பொருளாதார ஆய்வறிக்கையை மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி தாக்கல் செய்தார்.
இதையடுத்து அவர் 2014-2015ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை இன்று தாக்கல் செய்தார். இந்நிலையில் மத்திய பட்ஜெட் குறித்து சில தகவல்களை தெரிந்து கொள்வோம்.

84து
இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு இதுவரை 83 மத்திய பட்ஜெட்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இன்று நாட்டின் 84வது மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது.

மத்திய பட்ஜெட்
வருடாந்திர நிதி அறிக்கை தான் மத்திய பட்ஜெட் என்று அழைக்கப்படுகிறது. ஏப்ரல் 1ம் தேதி துவங்கி மார்ச் 31ம் தேதி வரையிலான நிதியாண்டில் அரசின் நிதி நிலையை கணக்கிடுவது தான் மத்திய பட்ஜெட் ஆகும்.

பிப்ரவரி
மத்திய பட்ஜெட் பொதுவாக பிப்ரவரி மாதம் கடைசி வேலை நாள் அன்று தாக்கல் செய்யப்படும். ஆனால் தேர்தல் நேரமாக இருந்தால் புதிய அரசு பதவியேற்கும் வரை இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்படும்.

அச்சகம்
பட்ஜெட் குறித்த தகவல்கள் நிதி அமைச்சகத்திற்கு சொந்தமான அச்சகத்தில் தான் அச்சிடப்படும்.

சண்முகம்
முதலாவது மத்திய பட்ஜெட் 1949ம் ஆண்டு ஆர்.கே. ஷண்முகத்தால் தாக்கல் செய்யப்பட்டது.

மன்மோகன் சிங்
சேவை வரியை மன்மோகன் சிங் கடந்த 1994ம் ஆண்டுக்கான பட்ஜெட்டில் அறிமுகப்படுத்தினார்.

கருப்பு பட்ஜெட்
1973-1974ம் ஆண்டுக்கான் மத்திய பட்ஜெட் கருப்பு பட்ஜெட் எனப்படுகிறது. காரணம் அந்த ஆண்டு பட்ஜெட் பற்றாக்குறை மட்டும் ரூ. 550 கோடி ஆகும்.

இறக்குமதி வரி
1991-92ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்த அப்போதைய நிதி அமைச்சர் மன்மோகன் சிங் வெளிநாட்டு முதலீடுகளை ஊக்குவித்ததுடன் 300க்கும் மேற்பட்ட சதவீதமாக இருந்த இறக்குமதி வரியை 50 சதவீதமாக குறைத்தார்.

2000
2000ம் ஆண்டு வரை பிப்ரவரி மாதம் கடைசி வேலை நாளில் மாலை 5 மணிக்கு தான் மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. 2001ம் ஆண்டு யஷ்வந்த் சின்ஹா காலை 11 மணிக்கு பட்ஜெட் தாக்கல் செய்தார்.

இந்தி
1955-56ம் ஆண்டில் தான் முதன்முதலாக பட்ஜெட் பேப்பர்கள் இந்தியில் தயார் செய்யப்பட்டன.

சிதம்பரம்
பிரணாப் முகர்ஜி, ப. சிதம்பரம், ஒய்.பி. சவான் மற்றும் சி.டி.தேஷ்முக் ஆகியோர் தலா 7 முறை மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்துள்ளனர். மேலும் மன்மோகன் சிங்கும், டிடி கிருஷ்ணமாச்சாரியும் தலா 6 முறை மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்துள்ளனர்.
-
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
அண்ணன் வர்றாரு! என்னப்பா ஆரம்பிச்சுருவோமா? அண்ணாமலை ஆரம்பிக்கும் ’பார்ட்டி’.. இதுதான் கொடி, சின்னமா? -
விஜய் செய்த சாணக்கியத்தனம்.. சத்தமில்லாமல் வெளியேற்றப்பட்ட கம்யூனிஸ்ட்கள்! இதை யாரும் கவனிக்கலையே! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
இசக்கி சுப்பையா யார் தெரியுமா? அடுத்து தாவும் அரசியல் புள்ளி இவரா? தவெக பக்கம் சாயும் அதிமுக கோட்டை -
மு.க.ஸ்டாலின் - எடப்பாடி பழனிசாமி இணைவார்கள்!ஆருடம் கணித்த.. ஆதவ் அர்ஜுனா! -
ஈரான் மக்களுக்கு விடிவுகாலம் பிறந்தது.. 87 நாட்களுக்கு பின்பு.. ஈரான் அதிபர் வெளியிட்ட அறிவிப்பு! -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
பயிர் கடன் தள்ளுபடியில் விஜய் வைத்த செக்.. 100%, 50% தள்ளுபடிக்கு பின் இருக்கும் ஸ்மார்ட் கணக்கு! -
ஸ்டாலின் கொண்டு வந்த காலை உணவு திட்டம் தொடரும்.. மெனு மாற்றம்.. அமைச்சர் ராஜ்மோகன் உறுதி












Click it and Unblock the Notifications