பாஜக பேசும் வளர்ச்சி யாருக்கானது? ஏழைகளைப் பற்றி ஏன் பேசுவதில்லை?: ராகுல்

ராஜஸ்தான் மாநில சட்டசபை தேர்தலையொட்டி பாரதிய ஜனதாவின் பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடியும் காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தியும் பல இடங்களில் தீவிர பிரசாரம் மேற்கொண்டு வருகின்றனர்.
பிகானிரில் பொதுக்கூட்டம் ஒன்றில் பேசிய ராகுல் காந்தி, எதிர்க்கட்சிகள் வளர்ச்சி வளர்ச்சி என்று பேசுகின்றனர். நீங்கள் பேசும் வளர்ச்சி யாருக்கானது? நீங்கள் பேசுகிற போது சாலைகள், விமான நிலையங்கள், ரயில்வே பாதைகளைப் பற்றியே பேசுகிறீர்கள்.
ஏன் ஏழைகளைப் பற்றி, ஏழை மக்களைப் பற்றி பேசுவதே கிடையாது? இந்த நாட்டில் அனைத்து தரப்பு மக்களும் வாழ்கின்றனர். காங்கிரஸ் கட்சியும் அனைத்து தரப்பு மக்களின் வளர்ச்சியையே விரும்புகிறது. ஆனால் பாஜகவோ விமான நிலையங்களை கட்டினாலே இந்தியா முன்னேறிவிடும் என்று நம்புகிறது.
உண்மைதான் விமான நிலையங்கள் கட்டத்தான் வேண்டும்.. ஆனால் அதற்காக இந்த நாட்டின் ஏழைகளைப் புறக்கணித்துவிட முடியாது.
பாரதிய ஜனதா கட்சியைப் பொறுத்தவரையில் ஹிந்துக்களும் இஸ்லாமியர்களும் மோதிக் கொள்ள வேண்டும் என்றுதான் விரும்புகிறது. ஆனால் காங்கிரஸ் அனைத்து இன மக்களும் இணைந்து வாழ வேண்டும் என்று விரும்புகிறது. ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் பல நலத் திட்டங்களால் லட்சக்கணக்கான மக்கள் பயனடைந்துள்ளனர்.
நாங்கள் தகவல் அறியும் உரிமை சட்டத்தைக் கொண்டு வந்தோம். இப்போது அரசை யார் வேண்டுமானாலும் எதிர்த்துக் கேள்வி கேட்கலாம். நாட்டில் கம்ப்யூட்டர்கள் அறிமுகப்படுத்தப்பட்ட போது கிண்டலடித்தனர். அதனால் என்ன பயன் என்று கேலி பேசினர். இன்று நிலைமை என்ன? கம்ப்யூட்டரின் முக்கியத்துவத்தை அனைவருமே உணர்ந்திருக்கிறோம் என்றார்.
-
விஜய்யை பார்க்க வேண்டாம்.. ஸ்டாலினை கைவிட்டு இருக்க கூடாது.. ராகுலிடம் எகிறிய ப்ரியங்கா காந்தி! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications