விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்

Subscribe to Oneindia Tamil

திருச்சி: திருச்சியில் இன்று விவசாயக் கடன் பற்றி பேசிய முதல்வர் விஜய், "கவலையேப் படாதீங்க விவசாய மக்களே.. இந்த விஜய் பொய் சொல்லி ஏமாற்றுவதற்கு அரசியலுக்கு வரவில்லை. உங்க கூடவே நின்று வேலை செய்யத் தான் அரசியலுக்கு வந்திருக்கிறான்.. இந்த ஒரு மாதத்தில் என்ன பண்ண முடியுமோ அதைத் தான் செய்திருக்கிறேன்" என கூறினார்.

தமிழக முதல்வர் விஜய் கூட்டுறவு வங்கிகளில் இருந்து ரூ.50,000 வரை மட்டுமே பயிர்க்கடன் தள்ளுபடி செய்வதாக அறிவித்துள்ளது கவலை அளிப்பதாகவும், தேர்தலுக்கு முன்பு அளித்த விவசாயக் கடன் வாக்குறுதியை முழுமையாக நிறைவேற்றக் கோரியும் விவசாயிகள் தெரிவித்த நிலையில் விஜய் இவ்வாறு பதில் அளித்துள்ளார்.

Farm Loan Waiver Vijay Assures Farmers Says I Won t Make False Promises

விவசாய கடன் தள்ளுபடி

200 யூனிட் கட்டணமில்லா மின்சாரம் அறிவிச்சோம். அதில் ஏற்கனவே இருந்த 100 யூனிட் இலவசம் என்பது திமுக கொடுத்தது இல்லை.. அது மேடம், ஜெயலலிதா கொண்டு வந்த திட்டம். பதவி போன அந்த கடுப்பில் ஸ்டாலின் சார் ஒரே அறிக்கையாக அடித்து விடுகிறார். நீங்க என்ன செஞ்சீங்க உங்க ஆட்சியில.. மக்கள் பணத்தை, டாஸ்மாக்கில் கொள்ளையடித்த அந்த பணத்தை ஊழல் செய்த அந்த ஃபைலை க்ளோஸ் பண்றதுக்கு அழையா அழைந்தீர்கள். ஆனால் நாங்க இந்த விஜய் மக்களுக்கு தொந்தரவாக இருக்கின்ற அந்த டாஸ்மாக் கடைகளை குளோஸ் பண்ணினான்.

விவசாய கடன் தள்ளுபடி செய்தோம். இந்த ஒரு மாதத்தில் என்ன பண்ண முடியுமோ அதனைத் தான் செய்திருக்கிறோம். நீங்க தான் நிதி சம்பந்தமாக இருக்கின்ற எல்லா கேட்டையும் லாக் பண்ணி வச்சுட்டு போயிருக்கீங்களே.. அதை எல்லாம் சரி செய்ய வேண்டாமா.. ஒழுங்குப் படுத்த வேண்டாமா? அதனால் நான் மறுபடியும் சொல்றேன். இந்த விஜய் பொய் சொல்லி ஏமாற்றுவதற்கு அரசியலுக்கு வரவில்லை. உங்க கூடவே நின்று வேலை செய்யத் தான் அரசியலுக்கு வந்திருக்கிறேன்.. அதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. கவலையேப் படாதீங்க விவசாய மக்களே..

வேரில் வெந்நீரை ஊற்றிவிட்டு

இந்த திமுகவும் மற்றும் பலரும் ஒன்னா சேர்ந்துக்கிட்டு விஜய் ஆட்சி அமைத்துவிட கூடாது என்று சொல்லி ஒரு கூத்து ஒன்னு பண்ணாங்களே.. அந்த 5 நாட்கள் இருக்கே.. அட அடா.. நமக்குல்லாம், ஆஹா.. இப்படி எல்லாம் கூட நடக்குமோ என்ன என்ன தோன்றியது.. என்னா கூத்து.. பியூச்சர் என்னவா இருக்கும் என்று சொல்கிறேன்.. உண்மையாக மக்களுக்காக உழைத்த விஜய்யா.. இல்லை.. இந்த விஜய்யோட ஆட்சி அமைந்துவிட கூடாது என நினைத்த ஸ்டாலின் சாரா.. அவ்வளவு தான். இதற்கு நடுவில்ரெண்டு பேருக்கு மட்டும் தான் போட்டி..

அவங்க தான் ஆட்சியிலேயே இல்லையே அவர்களை ஏன் விமர்சிக்குறீங்க, ஏன் குறை சொல்கிறீர்கள் என்று சொல்கிறார்கள்.. வேரில் வெந்நீரை ஊற்றிவிட்டு சென்றவர்களை வெளிச்சம் போட்டு காட்டாமல்.. பின்ன வேற என்ன சொல்வாங்க.. இதெல்லாம் மக்களிடம் தெளிவாக சொல்ல வேண்டும் அல்லவா?" என்று பேசினார்.

கவலை தெரிவித்த விவசாயிகள்

தமிழக முதல்வர் விஜய் கடந்த வாரம், "கூட்டுறவு வங்கிகளில் இருந்து ரூ.50,000 வரை பயிர்க்கடன் பெற்ற குறு விவசாயிகளுக்கு முழுமையாக பயிர்க்கடன் தள்ளுபடி செய்யப்படும் என்று அதிரடியாக அறிவித்தார். இந்தத் கடன் தள்ளுபடி திட்டம் 1 மே 2025 முதல் 28 பிப்ரவரி 2026 வரை கூட்டுறவு வங்கிகளில் பயிர்க்கடன் பெற்ற விவசாயிகளுக்கு மட்டுமே பொருந்தும் என்றும், மற்றவர்களுக்கு இது பொருந்தாது என்றும் அறிவித்து இருந்தார். மேலும் இந்த திட்டமானது, கூட்டுறவு வங்கிக் கடன்களுக்கு மட்டும் பொருந்தும். தேசியமயமாக்கப்பட்ட அல்லது தனியார் வங்கிகளில் பெற்ற கடன்களுக்கு இது பொருந்தாது என அறிவிக்கப்பட்டு இருந்தது.

அதே சமயம் விஜய் தேர்தல் வாக்குறுதியின் போது அனைத்து விவசாயக் கடன்களும் தள்ளுபடி செய்யப்படும் என கூறியிருந்தார். ஆனால் இப்போது "கூட்டுறவு வங்கிகளில் இருந்து ரூ.50,000 வரை மட்டுமே பயிர்க்கடன் தள்ளுபடி செய்வதாக அறிவித்துள்ளது" கவலை அளிப்பதாக விவசாயிகள் வேதனை தெரிவித்து இருந்தனர். பல்வேறு இடங்களில் போராட்டங்களிலும் ஈடுபட்டு இருந்தனர். இந்த நிலையில் தான் இதற்கு விளக்கம் அளிக்கும் வகையில் விஜய் பேசியுள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+