ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியாவுக்கு நிரந்தர இடம் வேண்டும்.. பான் கி மூனுக்கு மோடி கடிதம்
நியூயார்க் : ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியாவுக்கு நிரந்தர இடம் வழங்க வேண்டும் என்று பொதுச் செயலாளர் பான் கி மூனுக்கு பிரதமர் மோடி கடிதம் எழுதி உள்ளார்.
வருகிற 25-ந் தேதி அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள ஐ.நா. சபையில் 150 நாடுகளின் தலைவர்கள் பங்கேற்கும் 70-வது பொதுச் சபை கூட்டம் பொதுச் செயலாளர் பான் கி மூன் தலைமையில் நடைபெற உள்ளது.

இதில், போப் ஆண்டவர் பிரான்சிசும் கலந்துகொண்டு பேசுகிறார். இந்த கூட்டத்தில் அமெரிக்க அதிபர் ஒபாமா, பிரதமர் மோடி ஆகியோரும் உரையாற்றுகின்றனர்.
இந்த நிலையில் பிரதமர் மோடி, ஐ.நா. பொதுச் செயலாளர் பான் கி மூனுக்கு ஒரு கடிதம் எழுதி இருக்கிறார். அதில் அவர் கூறியிருப்பதாவது...
2015-ம் ஆண்டுக்கு பிறகான வளர்ச்சி குறித்த நிகழ்ச்சி நிரலில் ஐ.நா.விடம் நாங்கள் எதிர்பார்ப்பதெல்லாம், பாதுகாப்பு சூழலை உறுதி செய்வது தொடர்பான சீர்திருத்தங்கள் பொருத்தமானவையாகவும், ஆக்கப்பூர்வமானவையாகவும் இருக்கவேண்டும் என்பதுதான்.
குறிப்பாக ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் அவற்றை சிறந்த முறையில் நடைமுறைப்படுத்துவதையும் உறுதிசெய்யவேண்டும். நம் முன்பாக எத்தனையோ கடினமான பணிகள் இருந்தாலும் கூட இந்த ஒன்று மிகவும் அவசரமான மற்றும் முக்கியமான ஒன்றாகும்.
தற்போதுள்ள ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் சூழல்நிலைக்கு ஏற்ப உருவான ஒன்று. அது 21-ம் நூற்றாண்டின் எதார்த்த நிலைகளையும், தேவைகளையும் வெளிபடுத்துவதாக அமையவேண்டும்.
ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில், உலகின் மிகப்பெரிய ஜனநாயகமும், உலக பொருளாதாரத்தில் முக்கியமாக திகழும் மற்றும் அனைத்து பெரிய கண்டங்களில் இருந்தும் குரல்களை ஒலிப்பதை அடங்கியதாக, பெரும் நம்பிக்கைக்கு உரியதாக, சட்டப்படியானதாக அமையவேண்டும்.
அந்த சபை அதிக பிரதிநிதி நாடுகள் கொண்டதாகவும், பயன் தரத்தக்கதாகவும் இருக்கவேண்டும். இதில் இந்தியாவும் நிரந்தர இடம் பெறவேண்டும். சீர்திருத்தங்களை குறிப்பிட்ட கால வரையறைக்குள் நிறைவேற்ற வேண்டும்.
இவ்வாறு அந்த கடிதத்தில் மோடி குறிப்பிட்டுள்ளார்.
ஐ.நா. பொதுச் சபை கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக 23-ந் தேதி நியூயார்க் செல்லும் பிரதமர் மோடி, 26 மற்றும் 27-ந் தேதிகளில் சான்பிரான்சிஸ்கோ நகருக்கு செல்கிறார். பின்பு 28-ந் தேதி நியூயார்க் திரும்பும் அவர், அமெரிக்க அதிபர் ஒபாமாவை சந்தித்து இரு நாடுகள் இடையேயான உறவு குறித்து பேசுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பின்பு ஐ.நா. சபையில் நடைபெறும் பொது விவாதத்திலும் மோடி பங்கேற்கிறார்.
அமைதி, பாதுகாப்பு கவுன்சில் சீர்திருத்தம், தீவிரவாதம் மற்றும் பருவநிலை மாற்றம் ஆகியவற்றுக்கு மோடி தனது உரையில் முக்கியத்துவம் அளிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
-
NDA கூட்டணியில் தவெக? துணை முதல்வராகிறாரா விஜய்? சாணக்கியத்தனத்தை சொல்லி கொடுத்த பிரபல நடிகர் -
“சவுதியிலிருந்து உடனே வெளியேறுங்கள்..” முதல் முறையாக அறிவித்த அமெரிக்கா! ஆக்ரோஷமான ஈரான் -
விஜய்க்கு எதிராக வெளியான வீடியோ.. அதிர்ந்து போன நடிகை அம்பிகா! ஆதங்கத்துடன் பதிலடி -
அமெரிக்கா மீது இடியை இறக்கிய ஈரான்! டிரம்ப் மீது மக்கள் அதிருப்தி! இதுக்கு சும்மாவே இருந்திருக்கலாம் -
திருப்பூரில் இப்படியும் ஒரு புருஷன்.. எந்த கணவனும் செய்யக்கூடாத காரியம்.. ஆடிப்போன மனைவி -
Next CM: தமிழகத்தில் ஆட்சியை பிடிப்பது யார் தெரியுமா? சித்தர் கணிப்பை பாருங்க! அப்போ விஜய்? -
நியூசிலாந்து தொடரால் உடைந்துவிட்டேன்.. கிரிக்கெட் கடவுள் செய்த அட்வைஸ்.. நெகிழும் சஞ்சு சாம்சன்! -
எடப்பாடி கோட்டையில் திமுகவுக்கு ஷாக்! அதிமுகவுக்கு தாவிய முன்னாள் எம்.எல்.ஏ! -
படக்குனு 10 கிராமாவது வாங்கிப் போடுங்க! 19,000 சரிவில் தங்க விலை! அள்ளிப் போட இது தான் சரியான நேரம்! -
90, 60, 55, 25: தமிழகத்தின் அடுத்த முதல்வர் இவர்தான்? 2 துணை முதல்வர்கள் யார்? பலே பாஜக.. அப்ப விஜய் -
செவ்வாழை ரகசியம்: 48 நாட்கள் தொடர்ந்து பழத்தை சாப்பிட்டால் உடலில் நடக்கும் அந்த அதிசயம்..! -
வாடகை வீடுகளில் வசிக்கிறீங்களா? வந்தது 'பம்பர்' பரிசு.. மத்திய அரசின் புது வாடகை விதி! நோட் பண்ணுங்க












Click it and Unblock the Notifications