”அவர் எங்கள் மகள்” - கீதாவிற்கு சொந்தம் கொண்டாடும் உபி தம்பதியினர்

Subscribe to Oneindia Tamil

லக்னோ: பாகிஸ்தானில் இருந்து தாயகம் திரும்பிய மாற்றுத்திறனாளிப் பெண் கீதாவை அவர் தங்களுடைய மகள் என்று உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த தம்பதி ஒன்று கூறியிருப்பது புதிய பரபரப்பிற்கு வித்திட்டுள்ளது.

15 ஆண்டுகளாக பாகிஸ்தானில் தவித்து வந்த மாற்றுத்திறனாளி பெண் கீதா நேற்று இந்தியா திரும்பினார். ஏற்கனவே அவரை தங்களது மகள் என்று கூறியுள்ள பீகாரைச் சேர்ந்த ஜனார்த்தன் மஹதோ தம்பதியரை தனது பெற்றோர் இல்லை என கீதா கூறியிருந்த நிலையில் அவர்களுக்கு மரபணு சோதனை நடத்தப்பட உள்ளது.

UP couple claims Geeta is their daughter

இந்த நிலையில், உத்தரப்பிரதேச மாநிலம் பிரதாப்கார் மாவட்டத்தைச் சேர்ந்த ராம்ராஜ் கௌதம் மற்றும் அனரா தேவி தம்பதி, கீதா தங்களது காணாமல் போன மகள் என்று சொந்தம் கொண்டாடி உள்ளனர்.

அவர்கள் அலகாபாத் காவல்துறை ஆணையரிடம் தங்களது மனுவை அளித்துள்ள நிலையில் மகளைக் காண டெல்லி வந்திருப்பதாகவும் கூறப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+