உ.பி அரசுக்கு சொந்தமான விமானம் மும்பையில் விபத்து.. 5 பேர் பலி.. மீட்பு பணி தீவிரம்

உத்தர பிரதேச அரசுக்கு சொந்தமான விமானம் மும்பையில் விபத்துக்கு உள்ளாகி இருக்கிறது.

Subscribe to Oneindia Tamil

Recommended Video

    உ.பி. அரசுக்கு சொந்தமான விமானம் மும்பையில் விபத்து- வீடியோ

    மும்பை: உத்தர பிரதேச அரசுக்கு சொந்தமான விமானம் ஒன்று மும்பையில் விபத்துக்கு உள்ளாகி இருக்கிறது. இதில் விமானி உட்பட 5 பேர் பலியாகி உள்ளார்.

    விபத்துக்குள்ளான விமானம் உத்தர பிரதேச அரசு பணிகளுக்காக பயன்படுத்தப்படும் விமானம் ஆகும். மும்பைக்கு சென்று கொண்டிருந்த இந்த விமானம் பாதி வழியில் விபத்திற்கு உள்ளாகி உள்ளது.

    UP government plane crashes in Mumbai, kills pilot

    சரியாக விமான நிலையத்தில் இறங்குவதற்காக உயரத்தை குறைக்கும் போது விபத்து ஏற்பட்டுள்ளது. மும்பையில் கட்டுமான பணியில் இருந்த, கட்கோபுரில் உள்ள உயரமான ஜாக்ருத்தி கட்டிடத்தில் இந்த விமானம் மோதியுள்ளது.

    இதனால் அங்கு மோசமான புகை மூட்டம் ஏற்பட்டுள்ளது. இதனால் விமானி சம்பவ இடத்திலேயே மரணம் அடைந்துள்ளார். கட்டிடத்தில் இருந்தவர்களை மீட்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.

    விமானத்தில் பயணித்தவர்கள், கட்டிடத்தில் வேலை பார்த்தவர்கள் என்று மொத்தம் 5 பேர் பலியாகி உள்ளனர். காயமடைந்தவர்கள் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளனர்.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+