லோக்சபாவில் பாஜகவின் பெரும்பான்மைக்கு 'அக்னி பரீட்சையாக' வருகிறது 5 இடைத்தேர்தல்கள்!
லோக்சபாவில் பாரதிய ஜனதா கட்சியின் பெரும்பான்மைக்கு சோதனையாக வருகிறது 5 இடைத் தேர்தல்கள்.
Recommended Video

டெல்லி: பாரதிய ஜனதா கட்சியின் தனிப் பெரும்பான்மைக்கு அக்னி பரீட்சையாக 5 லோக்சபா இடைத் தேர்தல்கள் விரைவில் நடைபெற உள்ளன.
லோக்சபாவில் பாஜகவுக்கு 274 எம்.பி.க்கள் உள்ளனர். 2014-ம் ஆண்டு லோக்சபா தேர்தலில் பாஜக 282 இடங்களைக் கைப்பற்றியிருந்தது. அடுத்தடுத்த இடைத்தேர்தல்களில் தொடர் தோல்வியைச் சந்தித்ததால் பாஜகவின் பெரும்பான்மைக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
லோக்சபா சபாநாயகர் சுமித்ரா மகாஜன் இல்லாமல் மொத்தம் 273 எம்.பிக்கள்தான் பாஜகவுக்கு உள்ளனர். பெரும்பான்மைக்கு தேவையான எம்.பி.க்கள் எண்ணிக்கை 272.

இடைத் தேர்தல் தொகுதிகள் விவரம்
இந்த நிலையில் அடுத்ததாக 5 லோக்சபா தொகுதிகளுக்கு இடைத் தேர்தல்கள் நடைபெற உள்ளன. இத்தொகுதிகளுக்கான தேர்தல் தேதி இன்னமும் அறிவிக்கப்படவில்லை. உத்தரப்பிரதேசத்தின் கைரானா, மகாரஷ்டிராவின் பல்ஹார், பந்த்ரா-கோண்டியா, ஜம்மு காஷ்மீரின் அனந்தாக், நாகாலாந்தின் நாகாலந்து லோக்சபா தொகுதிகளுக்கு இடைத் தேர்தல் நடைபெற உள்ளது.

பாஜக தொகுதிகள் 3
இதில் கைரானா, பல்ஹார், பந்த்ரா-கோண்டியா ஆகிய தொகுதிகளில் 2014 தேர்தலில் பாஜக வென்றது. அனந்தநாக் தொகுதியில் வென்ற மெகபூபா முப்தி ஜம்மு காஷ்மீர் முதல்வரானார். நாகாலாந்து தொகுதியில் வென்ற நெய்பியூ ரியோ அண்மையில் அம்மாநில முதல்வரானார்.

இடைத்தேர்தலை எதிர்கொள்ள தீவிரம்
உ.பியில் கோரக்பூர், புல்பூர் தொகுதிகளை அண்மையில் நடைபெற்ற இடைத்தேர்தலில் பாஜக பறிகொடுத்தது. இதனால் மத்தியில் பாஜகவின் பெரும்பான்மை கேள்விக்குறியாகிவிட்டது. இதனால் கைரானா தொகுதியை தக்க வைக்க இப்போதே பாஜக தீவிரம் காட்டுகிறது. ஆனால் அங்கும் பகுஜன் சமாஜ்-சமாஜ்வாதி கை கோர்த்து களம் இறங்க உள்ளன. அத்துடன் காங்கிரஸையும் இணைத்துக் கொள்ளும் வியூகம் வகுக்கப்பட்டு வருகிறது. இதனால் பாஜகவுக்கு மிகப் பெரும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

மைனாரிட்டி அரசு?
மகாராஷ்டிராவில் ஆளும் பாஜக அரசு மீது விவசாயிகள் மிகவும் அதிருப்தியில் இருக்கின்றனர். இதைத்தான் அண்மையில் நடைபெற்ற லட்சக்கணக்கானோர் பங்கேற்ற செங்கடல் பேரணி உணர்த்தியது. அனந்தநாக், நாகாலாந்து தொகுதிகளை பிடிபியும் என்பிஎப்பும் கைப்பற்ற முயற்சிக்கலாம். இரு கட்சிகளுமே பாஜகவின் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அங்கம் வகிப்பவைதான். வரப்போகின்ற 5 இடைத்தேர்தல்களில் ஏற்கனவே 3 தொகுதிகளில் பாஜக வென்றாக வேண்டும். இல்லையெனில் லோக்சபாவில் பெரும்பான்மையை பறிகொடுத்துவிட்டு மைனாரிட்டி அரசாகத்தான் கூட்டணிக் கட்சிகள் ஆதரவுடன் ஆட்சியில் நீடிக்க முடியும்.
-
அண்ணாமலை 'மும்மொழி' எதிர்ப்பு: நேபாளப் பயணம்... ரஜினியுடன் ரகசிய சந்திப்பா? விரைவில் புது கட்சி -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
விஜய்யை வளைக்கிறதா தாமரை? காங்கிரஸை ஓரங்கட்ட தவெக மெகா பிளான்! அம்பலப்படுத்திய பாஜக -
மொத்தமாக காலியாகும் மம்தா கட்சி.. பாஜகவுக்கு தாவும் 50 திரிணாமுல் MLAகள்? 20 எம்பிக்களும் ராஜினாமா? -
நிர்மலா சீதாராமனை சந்திக்கும் விஜய்.. 20 நிமிடத்தை தாண்டுமா? மோடி சந்தித்த கையோடு அடுத்த முக்கிய அப்பாயின்மென்ட்! -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
வெறும் 10 நிமிடங்கள்தான்.. உடனே வெளியே வந்த விஜய்! மோடி உடனான சந்திப்பில் இப்படி நடந்ததே இல்லை! -
“காங்கிரஸ், கம்யூனிஸ்ட்களை விமர்சிக்க அவர்களுக்கு துணிச்சல் இல்லை”.. திருமாவளவன் அட்டாக்! -
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி!












Click it and Unblock the Notifications