யு.பி.எஸ்.சி தேர்வு முடிவு வெளியீடு: தமிழக அளவில் தேனி வாலிபர் முதலிடம்!
டெல்லி: மத்திய பணியாளர் தேர்வு வாரியத்தின் (யுபிஎஸ்சி) 2013ஆம் ஆண்டிற்கான தேர்வு முடிவு இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. தமிழக அளவில் தேனியை சேர்ந்த ஜெயசீலன் என்பவர் முதலிடம் பிடித்துள்ளார்.
2013ஆம் ஆண்டு நடைபெற்ற யு.பி.எஸ்.சி தேர்வை சுமார் 12 ஆயிரம் பேர் எழுதியிருந்தனர். இவர்களில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் நேர்முகத்தேர்வுக்கு தகுதி பெற்றிருந்தனர்.
இந்நிலையில், தேர்வு முடிவை மத்திய பணியாளர் தேர்வு வாரியம் இன்று வெளியிட்டுள்ளது. இதில், 1,122 பேர் தேர்வாகியுள்ளனர்.
பொதுப்பிரிவினர் 517 பேரும், ஓபிசி பிரிவினர் 326 பேரும், தாழ்த்தப்பட்டோர் பிரிவில் 187 பேரும், பழங்குடியினர் பிரிவில் 92 பேரும் தேர்ச்சி பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த தேர்வில் அகில இந்திய அளவில் கவுரவ் அகர்வால் முதலிடம் பெற்றுள்ளார். முனிஷ் சர்மா இரண்டாம் இடமும், ரச்சித் ராஜ் மூன்றாமிடும் பெற்றுள்ளனர்.
தேனியைச் சேர்ந்த ஜெயசீலன் தமிழகத்தில் முதலிடம் பிடித்துள்ளார். இவர் அகில இந்திய அளவில் 45-வது இடத்தைப் பிடித்துள்ளார். தமிழகத்தை சேர்ந்த பெனோ என்ற மாற்றுத்திறனாளி பெண் 343வது இடம் பிடித்துள்ளார்.
நாடு முழுவதும் ஐஏஎஸ், ஐஎப்எஸ், ஐபிஎஸ் மற்றும் குரூப் ஏ, குரூப் பி பிரிவில் 1228 பணியிடங்கள் காலியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications