''இஸ்ரேலுக்கு எதிராக ஐ.நா மூர்க்கத்தனமான விரோதம் கொண்டுள்ளது''- அமெரிக்கா
பாலத்தீனியர்கள் மற்றும் இஸ்ரேல் இடையில் அமைதி ஏற்படுத்தும் வாய்ப்புகளை ஐ.நா சீர்குலைப்பதாக, அமெரிக்காவின் ஐ.நாவுக்கான தூதர் நிக்கி ஹேலி குற்றஞ்சாட்டியுள்ளார்.
இஸ்ரேலுக்கு எதிராக மூர்க்கத்தனமான விரோதம் கொண்டுள்ள உலகின் முன்னணி அமைப்புகளில் ஐ.நாவும் ஒன்று என நிக்கி ஹேலி கூறியுள்ளார்.
அமெரிக்க தூதரகத்தை ஜெருசலேத்திற்கு மாற்ற அமெரிக்க அதிபர் டிரம்ப் முடிவெடுத்த பிறகு கூட்டப்பட்ட அவரச ஐ.நா பாதுகாப்பு கூட்டத்தில் நிக்கி உரையாற்றினார்.
அமெரிக்காவின் இந்த முடிவுக்கு பரவலாக கண்டனங்கள் எழுந்துள்ளது. அத்துடன் ஜெருசலேத்தில் மோதல்களைத் தூண்டியுள்ளது.
பாலத்தீனிய தீவிரவாதிகள் இஸ்ரேலின் பிரதேசங்கள் மீது ரக்கெட்களை ஏவிய பிறகு, காஸா பகுதியில் இலக்குகளைக் குறிவைத்து இஸ்ரேல் நடத்திய வான் தாக்குதலில் பலர் காயமடைந்துள்ளனர்.
வெள்ளிக்கிழமையன்று காஸாவில் நடந்த மோதலில், கூட்டத்தினரை நோக்கி இஸ்ரேல் படையினர் சுட்டதில், இரண்டு பாலத்தீனியர்கள் பலியாகினர்.
பல தசாப்தங்களாக இந்த விவகாரத்தில் அமெரிக்கா நடுநிலையாக நடந்துவந்த நிலையில், இந்த மரபுகளை மீறி இஸ்ரேலின் தலைநகராக ஜெருசலேத்தை அங்கீகரிப்பதாக டிரம்ப் அறிவித்த பிறகு மத்திய கிழக்கில் பதற்றங்கள் உயர்ந்துள்ளன.
ஜெருசலேத்தை தனது தலைநகராக இஸ்ரேல் எப்போதும் கருதுகிறது. ஆனால், 1967 போரின் போது கிழக்கு ஜெருசலேத்தை இஸ்ரேல் ஆக்கிரமித்ததாக பாலத்தீனியர்கள் கூறுகின்றனர்.
''அமெரிக்காவின் முடிவு தெளிவாக அங்கீகரித்துள்ளது. ஜெருசலேமே இஸ்ரேலின் தலைநகர்'' என நிக்கி கூறியுள்ளார்.
''அமைதியை ஏற்படுத்துவதற்கு அமெரிக்கா தொடர்ந்து பணியாற்றும்'' என கூறிய அவர், ஐ.நா ஒருதலைபட்சமாக செயல்படுவதாகக் குற்றஞ்சாட்டினார்.
அமெரிக்க அதிபர் டிரம்பின் நகர்வால், இனி அமெரிக்காவை ஒரு சமாதான தூதராக பார்க்கமுடியாது என பாலத்தீய பிரதிநிதி ரியாட் மான்சூர் கூறியுள்ளார்.
இஸ்ரேலின் பிரதிநிதி டேனி டானன் அமெரிக்காவுக்கு நன்றி தெரிவித்துள்ளார். ''இது இஸ்ரேலுக்கு ஒரு மைல்கல், சமாதானத்திற்காகவும், உலகிற்காகவும்'' என அவர் கூறியுள்ளார்.
பிற செய்திகள்
- “மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சியில் ஆளுநர் தலையிடுவதா?”
- ஓரிரு வரிகளில் உலகச் செய்திகள்
- தீவிரமடையும் கலிஃபோர்னியா காட்டுத்தீ: 2 லட்சம் பேர் வெளியேற்றம்
-
சிங்கப்பூரில் இந்தியாவை பாராட்டிய அமெரிக்க பாதுகாப்பு துறை அமைச்சர்.. வியந்து போய் சொன்ன விஷயம் -
குட்டையை குழப்பும் இஸ்ரேல்.. ஈரானிடம் கெஞ்சும் டிரம்ப் அரசு.. இறுதிக்கட்டத்தில் போர்! -
ஈரானுடன் போர் நிறுத்தம்.. 14 பாயிண்ட்களை அடுக்கிய அமெரிக்கா! கையெழுத்து போடுவாரா டிரம்ப்? -
ஹார்முஸ் நீரிணைக்கு சுங்க கட்டணமா? மொத்த அரபு நாடுகளும் க்ளோஸ்.. அமெரிக்கா சீரியஸ் வார்னிங்! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை!
















Click it and Unblock the Notifications